Showing posts with label இரண்டாம் உலகம். Show all posts
Showing posts with label இரண்டாம் உலகம். Show all posts

Wednesday, October 16, 2013

மன்னவனே என் மன்னவனே

படம் : இரண்டாம் உலகம்
இசை : ஹாரிஸ்ஜெயராஜ்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: ஹரிஹரன்,பாலக்காடு ஸ்ரீராம்

மன்னவனே என் மன்னவனே
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே
வின்மீன தேடி தேடி எங்கே அழைவேன்

உன் இணைக் கிள்ளி வரும்வரை
ஒரு துணை கிளி நானடி
இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா
(மன்னவனே)

வருவது வருவது வருவது துணையா சுமையா
தருவது தருவது தருவது சுகமா வலியா
ஒரு உயிருக்கு இரு உடலா
இரு உடலுக்கும் ஒரு மனமா
என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள எரியுர நெனப்பிது
சொல்லித்தான் தெரியுமா
ஒரு வட்டத்துல வட்டத்துல தொடக்கம் முடிவெது
சொல்லத்தான் முடியுமா
(ஓ... மன்னவனே)

பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா
வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா
ஓ...
பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா
வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா
தினம் நடக்கிறேன் ஒரு திசையில்
மனம் கிடக்குதே மறு திசையில்
ஒரு உப்பு கல்லு உப்பு கல்லு கடலுல விழுந்ததும்
உருவம் கரஞ்சதே
இந்த ஒத்த பொண்ணு ஒத்த பொண்ணு உனக்குள்ள விழுந்தது
மெத்த காத முடிஞ்சதே
(ஓ... மன்னவனே)

உன் இணைக் கிளி வரும்வரை
ஒரு துணை கிளி நானடி
இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா

ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே

படம் : இரண்டாம் உலகம்
இசை : ஹாரிஸ்ஜெயராஜ்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: ஹரிஹரன்,பாலக்காடு ஸ்ரீராம்

ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே
ஒரு தீக்கோழி தீக்கோழி ஆவேன் பெண்ணே
திக்காடு நான் தோடி போவேன் முன்னே
அடி சாக்காடு பூக்காடு ஆகும் கண்ணே

அடி ஒத்தைக்கு ஒத்த... ஒரு யுத்தம் பாரு...
இனி எட்டுத்திக்கும்... எடம் மாரும் பாரு...

ஒரு மலருக்காக ஆறேழு மலைய பேப்பேனே
என் மனசுக்குள்ள நீதானே மானே
ஒரு பறவைக்காக ஏழு ஏழு காட கடப்பேனே
என் உசுருக்குள்ளே நீதானே தேனே...
( ஓ... ராக்கோழி)

வெறி கொண்ட நடை நடந்தால்
இந்த பூமி பொடி படுமே
அழகி என் பெயரை சொன்னால்
அந்த ஆறு வழி விடுமே
என் காலடி மிதி படும் கல்லு வெளிச்சத்துல்
கார் இருல் சிதருமடி
நான் வண்ணக்காட்டில் ஒத்தையில போறேன்டி
உன் வயசுக்கு பதில் சொல்ல வாரேன்டி
ஹேய் கார்த்திக வெயிலே காத்திரு குயிலே
உசுர போக்கி உசுரோட வருவேன்
(ராக்கோழி)

குமரிக்கு தாலி செய்ய
அவன் பல்ல நான் உடைப்பேன்
குழந்தைக்கு தூளு கட்ட
அவன் தோல நான் உரிப்போன்
அந்த இளய கன்னிக்கு கூந்தல் வாருவேன்
எழும்பில் சீப்பெடுப்பேன்
இங்க வரும் போது எட்டு வச்சு வந்தேனடி
நான் போகும் போதும் மேகம் பேலே போவேன்டி
என் இடையே மழையே புயலே வெயிலே
மன்னவன் வருகையை முன்னமே சொல்லு
(ராக்கோழி)

அடி ஒத்தைக்கு ஒத்த... ஒரு யுத்தம் பாரு...
இனி எட்டுத்திக்கும்... எடம் மாரும் பாரு...

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்

படம் : இரண்டாம் உலகம்
இசை : ஹாரிஸ்ஜெயராஜ்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: கார்த்திக்

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய்
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய

நான் எட்டு திக்கும் அழைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டில்
நான் பட்டாம்பூச்சி ஆவதா
( நான் எட்டு)

உந்தன் கன்னத்தோடு எந்தன் கன்னம் வைத்தால்
நானும் மண்ணில் கொஞ்சம் வாழ்ந்திருப்போன்
அடி உந்தன் கன்ன குழியில் என்னை புதைத்து வைத்தால்
மண்ணில் மாண்ட பின்னும் வாழ்ந்திருப்பேன்
ஒரு கள்ளப் பார்வை பார் அழகே
சிரு காதல் போசும் கிளியே
நான் தேடி திரியும் வாழ்வே நீ தானே
தென்றலே வா முன்னே முத்தமா கேட்கிறேன்
முருவல் தான் கேற்கிறேன்

கனிமொழியே... ம்ம்ம்ம்ம்
கடைவிழியே... ம்ம்ம்ம்ம்

பறவை பார்க்கும் போது
ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்
விழி உன்னை காணும் போது
உலகம் தொலைந்து போகும்
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்
என்னை கட்டி போடும் காந்த சிமிரே
ஒரு பாட்டு பாடு காட்டுக் குயிலே
என் காலை கனவின் ஈரம் நீதானா
வாழலாம் வா பெண்ணே வலது கால் எட்டு வை
வாழ்க்கையை தொட்டு வை

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய்

ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய்

நான் எட்டு திக்கும் அழைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டில்
நான் பட்டாம்பூச்சி ஆவதா
( நான் எட்டு)

பழங்களா விஷ முள்ளா

படம் : இரண்டாம் உலகம்
இசை : ஹாரிஸ்ஜெயராஜ்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: தனுஷ்  

பழங்களா விஷ முள்ளா
ஒரு கூத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சம் எரியும்
ஒரு பைத்தியம் புடிச்சா பௌர்ணமி நிலவே
மேகத்த கிழிச்சு எரியும்
(ஆ... பழங்கள்ளா)

பொண்ணு மனசு ஒரு திணுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்...

ஹேய்...புரிஞ்சதா...

பொண்ணு மனசு ஒரு திணுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்
என்ன பந்தாடும் மிருகம்
கூரு போட்டு கூத்தாடும் தெய்வம்
அவ நெனப்ப புரிவதில்லே
ஒரு ஆம்பள பொழப்பு அழியும்
நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க
ஆத்தாடி என்ன பன்னி நான் தொலைக்க
பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா
பாதத்த இமைகளில் வருடட்டுமா
நீ சொல்லும் வார்த்தைக்கு வாசிக்கட்டுமா
கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா
(பழங்கள்ளா)

உலகத்துல தம்பதிக சேர்ந்திருப்பது ஒன்னோ ரெண்டு
அட வெளியில சேர்ந்து சுத்தும்
விட்டுக்குள்ள கட்டில் மாட்டும் ரெண்டு இருக்கும்
என் விதியே இது தானா
பெருந்தினவுக்கு பத்தியம் தானா
என் ராத்திரி எரியுதடி
தூக்கமில்ல ரகசியம் ஒடையுதாடி
கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே
காதலின் திமிருக்கு பிறந்தவளே
கருணையால் இதயத்தை கொன்றுவிடு
கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு...

யேலே யேலே யேலே ஏலா
ஒரு ஊத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
தானே தானே தானா...
ஒரு பைத்தியம் புடிச்சா பௌர்ணமி நிலவு

இதுக்கு மேல என்ன சொல்லுரது

விண்ணை தாண்டி அன்பே வந்தாய்

படம் : இரண்டாம் உலகம்
இசை : ஹாரிஸ்ஜெயராஜ்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: விஜய் பிரகாஷ்  

நீயா... நீயா... நீயா சொல்லு நீயே நீயா

விண்ணை தாண்டி அன்பே வந்தாய் என்னுல் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா
மறைந்தது அங்கே... மலர்ந்தது இங்கே மாயமா மாயமா
சொல் நடந்தது பொய்யா... நடப்பது பொய்யா காதலே நியாயமா

என் காதல் நிலா தன் கை வீசுதோ
என் ஆகாயம் ரெண்டாக தெரிகிறதோ...
நியா... நியா... நியா சொல்லு நியே நியா
மெய்யா... பொய்யா... கண்ணில் மின்னும் காதல் பொய்யா
நியா... நியா... நியா சொல்லு நியே நியா
மெய்யா... பொய்யா... கண்ணில் மின்னும் காதல் பொய்யா

அந்த பனிகண்கள் பொங்கும் மொழி பார்வை
என்னை கொல்லாமல் கொல்லுதடி
இது நிஜம் தானா இல்லை நிழல் தானா
என்ன வினோதம் மின்னுதடி
உன்னை மருத்த பின்னும் என்னம் வாழ்கின்றதே வாழ்வே மாயமா
கண்ணை திரந்த படி இன்னும் கனவுகளா எல்லாம் சொகமா
கருகிய நெஞ்சில் பெருகிய கண்ணீர் காதலை மீட்குமா
நான் கனவிலும் இல்லை நினைவிலும் இல்லை காதலே நியாயமா

விண்ணை தாண்டி அன்பே வந்தாய் என்னுல் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா

இது புது லோகம் அது புது வானம்
அங்கு நிலாக்கள் ரெண்டு உண்டு
இவள் அவள் தானா அவள் இவள் தானா
என்று வினாக்கள் நெஞ்சில் உண்டு
பிசிர் அழுதாலும் உன் தசை எரிந்தாலும் ஆன்மா அழியுமா
எந்தன் பேர் என்ன எந்தன் உறவென்ன இவள் உள்ளம் அரியுமா

காதல் உண்மை என்றால்
வானும் மண்ணும் மாரும் காதலே கடவுளா
ஓ... காதல் உண்மை என்றால்
வானும் மண்ணும் மாரும் காதலே கடவுளா

நியா... நியா... நியா சொல்லு நியே நியா
மெய்யா... பொய்யா... கண்ணில் மின்னும் காதல் பொய்யா
நியா... நியா... நியா சொல்லு நியே நியா
மெய்யா... பொய்யா... கண்ணில் மின்னும் காதல் பொய்யா
(விண்ணை)

என் காதல் நிலா தன் கை வீசுதோ
என் ஆகாயம் ரெண்டாக தெரிகிறதோ...

என் காதல் தீ தீ வாசம் நீ

படம் : இரண்டாம் உலகம்
இசை : ஹாரிஸ்ஜெயராஜ்
பாடல் : வைரமுத்து
பாடியோர்:  S. P.பாலசுப்பிரமணியம்

என் காதல் தீ... தீ வாசம் நீ...
கண் பார்த்தோம் வா... கை சேர்ப்போம் வா...
பல உயிர்கள் எரியும் உடல்கள் மாரியும்
பயணப்படுவது காதல்

காதல் சாதல்
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டுமடி

என் காதல் தீ... தீ வாசம் நீ...
கண் பார்த்தோம் வா... கை சேர்ப்போம் வா...

உடல்கள் இரண்டும் சேரும் முன்
உல்லம் இரண்டும் சேருமே
உடலின் வலியே உயிரை தொடுவது காதலே
இதயம் இரண்டு்ம் தூரம் தான்
இதல்கள் நான்கும் அருகில் தான்
இதல்கள் வலியே இதயம் தொடுவது காதலே
ஊசி போதும் ரெண்டு கண்களில் உயிரை குடித்தவளே நீ
உயரம் காட்டும் பூக்கள் இரண்டினில் உலகம் உடைப்பவள் நீ

காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி

காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டுமடி

உலகில் காதல் பழையது
உற்ற பொழுதே புதியது
எல்லா நிலத்தும் எல்லா பொழுதும் நிகழ்வது
உலகின் நெறுப்பு காதலே
உயிரில் இருப்பு காதலே
உண்மை காதல் உலகைவிடவும் பெரியது
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலில் குளுங்கும் பூவிதுவே
பாலை வெயிலிலும் காணல் வெளியிலும் படரும் நிழில்லிதுவே

கண்டார் மயங்கும் வண்டார் மலரே
நின்றோர் மொழி சொல்லடி
உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்து
என்ன செழுமையடி

பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது
என்ன செழுமையடி

அதை மெத்தம் எடுத்து சித்தம் துடிக்குதடி

பெண் பாவாய் வா...
கண் பாவாய் வா...
செங்கோடாய் வா...
சென் தேனாய் வா...