Showing posts with label தீனா. Show all posts
Showing posts with label தீனா. Show all posts
Friday, October 26, 2012
வத்திக்குச்சி பத்திக்காதுடா-தீனா
படம்: தீனா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வத்திக்குச்சி பத்திக்காதுடா
யாரும் வந்து உரசற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா
யாரும் உன்னை உசுப்புற வரையில
ஈர்க்குச்சியாய் இல்லாம நீ
தீக்குச்சியா இருடா
உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா
உன் வாழ்வில் வெளிச்சம் வரும்
(வத்திக்குச்சி...)
மனசு உடுத்தின கவலை துணி
எடுத்து அவிழ்த்தெறி எதற்கு இனி
இருக்கும் கண்ணீரையும்
ஏத்தம் நீ போட்டெடு
அழவா இங்கே வந்தோம்
ஆடு பாடு ஆனந்தமா
(வத்திக்குச்சி...)
முயற்சி செய்தால் சமயத்துல
முதுகு தாங்கும் இமயத்தையே
மனசை இரும்பாக்கனும்
மலையை துரும்பாக்கனும்
ஆழ்கடல் கூட தான்
ஆறு ஓரம் ஆளமடா
(வத்திக்குச்சி...)
Saturday, September 29, 2012
சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்-தீனா
படம் : தீனா
பாடல் : சொல்லாமல் தொட்டு
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் : ஹரிஹரன்
சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டிச் செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னைக் கொல்ல கொல்ல
இந்தக் காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்
(சொல்லாமல்)
ஓ காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
அமிலம் அருந்திவிட்டேன்
ஓ நெருப்பை விழுங்கிவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூப் பறித்தவள் நீதானே
(சொல்லாமல்)
ஓ பெண்களின் உள்ளம் படுகுழியென்பேன்
விழுந்து எழுந்தவன் யார்
ஆழம் அளந்தவன் யார்
ஓ கரையைக் கடந்தவன் யார்
காதல் இருக்கும் பயத்தினில்தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன்தான் அலைவான் வீதியிலே
(சொல்லாமல்)
Subscribe to:
Posts (Atom)