Showing posts with label உன்னை நினைத்து. Show all posts
Showing posts with label உன்னை நினைத்து. Show all posts
Saturday, October 20, 2012
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை-உன்னை நினைத்து
படம் : உன்னை நினைத்து
இசை : சிற்பி
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள் : உன்னி மேனன்
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
பனிகூட உன்மேல் படும் வேளையில்
குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே
மலர்கூட உன்னை தொடும் வேளையில்
பூவென்று தானே சூட நினைக்குமே
அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
உன் அழகை பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை
உன்னை தேடும்போது இதயம் இங்கு சுகமாக தொலைந்ததே
—
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
—
அன்பே உன் கண்கள் சுழல் என்கிறேன்
அதனாலே அங்கே மூழ்கி போகிறேன்
அன்பே உன் பேரை படகெங்கிறேன்
அதை சொல்லிதானே கரையை சேர்கிறேன்
உன் கொலுசின் ஓசை கேட்க தங்க மணிகள் கோர்ப்பேன்
அதில் இரண்டு குறைந்து போனால் கண்ணின் மணிகள் சேர்ப்பேன்
உன்னை தீவு போல காத்து நிக்க கடலாக மாறுவேன்
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
Subscribe to:
Posts (Atom)