Showing posts with label காலமெல்லாம் காதல் வாழ்க. Show all posts
Showing posts with label காலமெல்லாம் காதல் வாழ்க. Show all posts

Sunday, December 2, 2012

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்- காலமெல்லாம் காதல் வாழ்க


படம் : காலமெல்லாம் காதல் வாழ்க
இசை : தேவா
பாடியவர் : ஹரிஹரன்
பாடலாசிரியர் : வைரமுத்து

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்த பாடலின் ஸ்வரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்

வாசம் மட்டும் வீசும் பூவே
வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா
தென்றல் போல எங்கும் உன்னைத் தேடுகிறேன்
நான் தேடுகிறேன்
தேடி உன்னைப் பார்த்துப் பார்த்து
கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து
சிந்தும் விழி நீரில் நானே மூழ்குகிறேன்
நான் மூழ்குகிறேன்
வீசிடும் புயல் காற்றிலே நான் ஒற்றை சிறகானேன்
காதலின் சுடும் தீயிலே நான் எரியும் விறகானேன்
மேடைதோறும் பாடல் தந்த வான்மதியே
ஜீவன் போகும் முன்பு வந்தால் நிம்மதியே
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

ஒ... ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்

உந்தன் முகம் பார்த்த பின்னே
கண்ணிழந்து போவதென்றால்
கண் ரெண்டும் நானிழப்பேன் இப்போதே
நான் இப்போதே
உந்தன் முகம் பார்க்கும் முன்னே
நான் மறைந்து போவதென்றால்
கண்கள் மட்டும் அப்பொழுதும் மூடாதே
இமை மூடாதே
காதலே என் காதலே எனை காணிக்கை தந்துவிட்டேன்
சோதனை இனி தேவையா சுடும் மூச்சினில் வெந்து விட்டேன்
காதல் என்னும் சாபம் தந்த தேவதையே
காணலாமோ ராகம் நின்று போவதையே
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்