Showing posts with label ரஜினிகாந்த். Show all posts
Showing posts with label ரஜினிகாந்த். Show all posts

Wednesday, December 19, 2012

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்-கோச்சடையான்


படம்: கோச்சடையான்
இசை: A.R.ரஹ்மான்
பாடல்: வைரமுத்து
பாடியோர்:

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய்
இதயம்
உடலில் இருந்து விழுந்து
உருண்டு புரண்டு போகுதே

நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து
வெள்ளச் சுழியில் விழுந்து மலராய்...
இதயம்
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து அலைந்து போகுதே
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு
என் உயிரோ சிறிதே
காதலோ பெரிதே

பூப்பது மறந்தன கொடிகள்
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
யானோ நின்னை மறக்கிலேன்

செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று
உளியைப் பிரியும் சிற்பம்
யானோ நின்னைப் பிரிகிலேன்
வாய் மொட்டுடைந்தால்
பூவாசம் வாசத்துக்கேது சிறைவாசம்.?

Friday, December 14, 2012

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்-எஜமான்

படம் : எஜமான்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடலாசிரியர்: R.V. உதயகுமார்

கங் கண கணவென கிங் கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க
எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் ஒலி முழங்க முழங்க
ஒரு சுயம்வரம் நடக்கிறதே யே......
இது சுகம் தரும் சுயம்வரமே யே....
ஆ ஆ ஆ...... ஆ ஆ ஆ.....

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே
எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே

ஆஆ... ஆ...   ஆஆ... ஆ ...
ஆஆ... ஆ...   ஆஆ...

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

தனனனன... தனனனன... தனனனன...
தனனனன... ன... ன... ன... ன...

சுட்டு விரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
உன் அடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்

உன் உதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்
உன் உடலில் நான் ஓடி உள்ளழகை தேடுவேன்

தோகை கொண்டு நின்றாடும் தேங்கரும்பு தேகம்
முந்தி வரும் தேன் வாங்கி பந்தி வைக்கும் நேரம்

அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு
வம்புகள் என்ன வரம்புகள் விட்டு

ஆஆ... ஆ...   ஆஆ... ஆ ...
ஆஆ... ஆ...   ஆஆ...

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
இணையான இளமானே துணையான இளமானே

ஆஆ... ஆ...   ஆஆ... ஆ ...
ஆஆ... ஆ...   ஆஆ...

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

கட்டிலிடும் சுட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக்கொடி தரும் அந்த பிள்ளைக்கனி வேண்டுமே

உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா
என்னுடைய தாலாட்டில் கண் மயங்கி தூங்க வா

ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே
ஆறு ஏழு கேட்டாலும் பெறெடுப்பேன் நானே

முத்தினம் வரும் முத்து தினம் என்று
சித்திரம் வரும் விசித்திரம் என்று

ஆஆ... ஆ...   ஆஆ... ஆ ...
ஆஆ... ஆ...   ஆஆ...

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே

ஓ... எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே
ஆஆ... ஆ...   ஆஆ... ஆ ...
ஆஆ... ஆ...   ஆஆ...

Thursday, December 13, 2012

ஆடல் கலையே தேவன் தந்தது-ஸ்ரீராகவேந்திரா


படம்: ஸ்ரீராகவேந்திரா
பாடியவர்: K.J.ஜேசுதாஸ்
இசை: இளையராஜா
பாடல்:

ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது...
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது.
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது......

மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்
மல்லிகையே வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்

வண்ண வண்ண மேலாடை ஆஆஆ
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவி தான் வந்தாள்.
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவி தான் வந்தாள்.

ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது...
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது.
தேவன் தந்தது தேவன் தந்தது

சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடைதான் கண்பறிக்கும் மின் கொடியோ,
சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடைதான் கண்பறிக்கும் மின் கொடியோ,

விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெந்நிற நிலா
பெண்ணென காலெடுத்து வந்ததோ உலா..
முன்னழகும் பின்னழகும் பொன்னழகோ
முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ

தலைசிறந்த கலைவிளங்க நடம்
புரியும் பதுமையோ - புதுமையோ
சதங்கைகள் தழுவிய பதங்களில்
பலவித ஜதி ஸ்வரம் வருமோ!!

குரல் வழி வரும் அனிமொழி ஒரு சரச பாஷையோ
சுரங்களில் புது சுகங்களைத் தரும் சாருகேசியோ!!!
ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ரி
க ம ம தக திமி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ப தா
நி ரி ஸா கா மா கா ரி க ரி ஸ ம ரி தா
நி ரி ச நி தா ப ஸா நி த ப

தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்

ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது...
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது.
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது.... தேவன் தந்தது....

Monday, October 1, 2012

கிளிமாஞ்சாரோ-எந்திரன்


பாடியவர்கள் : ஜாவித் அலி,சின்மையி
படம்: எந்திரன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல் : பா.விஜய்

கிளிமாஞ்சாரோ மலைக்
கனிமாஞ்சாரோ  கன்னக்
குழிமாஞ்சாரோ
யாரோ யாரோ

ஆஹா.... அஹா...
ஆஹா.... அஹா...

மொகஞ்சதாரோ  உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

ஆஹா.... அஹா...
ஆஹா.... அஹா...

காட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடிய்யா
முத்தத்தால வேக வச்சு
சிங்கப்பல்லில் உரிய்யா

ஆஹா.... அஹா...
ஆஹா.... அஹா...

மலைப்பாம்பு போல வந்து
மான்குட்டியப் புடிய்யா
சுக்குமிள்கு தட்டி என்ன
சூப்பு வச்சுக் குடிய்யா

ஏவாளுக்குத்
தங்கச்சியே யெங்கூடத்தான்
இருக்கா

ஆளுயற ஆலிவ்பழம்
அப்படியே எனக்கா?

அக்கக்கோ - அடி
கின்னிக்கோழி
அப்பப்போ - யென்னப்
பின்னிக்கோடி
இப்பப்போ - முத்தம்
எண்ணிக்கோடி!

எண்ணிக்கோ...நீ

கிளிமாஞ்சாரோ - மலைக்
கனிமாஞ்சாரோ - கன்னக்
குழிமாஞ்சாரோ
யாரோ யாரோ

மொகஞ்சதாரோ - உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

கொடி பச்சையே
எலுமிச்சையே
உன்மேல் உன்மேல்
உயிர் இச்சையே

அட நூறு கோடி தசை
ஒவ்வொன்றிலும்
உந்தன் பேரே இசை!

இனிச்சக்கீரே
அடிச்சக்கரே
மனச ரெண்டா ஓஹோ
மடிச்சுக்கிரே


நான் ஊற வைத்தக்
கனி - என்னை மெல்ல
ஆற வைத்துக் கடி!

வேர்வரை நுழையும்
வெய்யிலும் நான் - நீ
இலைத்திரை ஏன் இட்டாய்?

உதட்டையும் உதட்டையும்
பூட்டிக் கொண்டு - ஒரு
யுகம் முடித்து திற அன்பாய்!

அக்கக்கோ - அடி
கின்னிக்கோழி
அப்பப்போ - யென்னப்
பின்னிக்கோடி
இப்பப்போ - முத்தம்
எண்ணிக்கோடி!

எண்ணிக்கோ..நீ


கிளிமாஞ்சாரோ - மலைக்
கனிமாஞ்சாரோ - கன்னக்
குழிமாஞ்சாரோ
யாரோ யாரோ

ஆஹா.... அஹா...
ஆஹா.... அஹா...

மொகஞ்சதாரோ - உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

சுனைவாசியே சுகவாசியே
தோல்கருவி எனைவாசியே

நீ தோல்குத்தாத பலா -  றெக்கைக்கட்டி
கால்கொண்டாடும் நிலா

ஆங்..மரதேகம் நாம் மரங்கொத்தி நீ
வனதேசம் நான் அதில்வாசம் நீ

நீ நூறு கிராம்தான் இடை - உனக்கு இனி
யாரு நான்தான் உடை

ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி - என்னை
மேய்ந்துவிடு மொத்தம்

பச்சைப் பசும்புல் நீயானால்
புலி புல் தின்னுமே என்ன குத்தம்?

அக்கக்கோ - நான் கின்னிக்கோழி
அப்பப்போ - என்னெப்
பின்னிக்கோ நீ
இப்பப்போ - முத்தம்
எண்ணிக்கோ நீ

அக்கக்கோ - அடி
கின்னிக்கோழி
அப்பப்போ - யென்னப்
பின்னிக்கோடி
இப்பப்போ - முத்தம்
எண்ணிக்கோடி!
எண்ணிக்கோ நீ


புதிய மனிதா பூமிக்கு வா-எந்திரன்


படம்: எந்திரன்
பாடியவர்கள்:  ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.பி. பாலசுப்ரமணியம், கதிஜா ரஹ்மான்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடல்: வைரமுத்து

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி
ஹார்ட் டிஸ்கில் நினைவூட்டி
அழியாத உடலோடு
வலியாத உயிரோடு
ஆறாம் அறிவை அறைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

மாற்றம் கொண்டு வா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால் உலகை மாற்று
எல்லா உயிருக்கும் நன்மையாயிரு
எந்த நிலையிலும் உண்மையாயிரு

எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா

நான் கண்டது ஆறறிவு நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறு மொழி நீ பெற்றது நூறு மொழி
ஈரல், கணையம் துன்பமில்லை இதயக் கோளாறெதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை எந்திரம் வீழ்வதில்லை

கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை
இதோ என் எந்திரன் இவன் அமரன்
இதோ என் எந்திரன் இவன் அமரன்

நான் இன்னொரு நான்முகனே
நீ என்பவன் என் மகனே
ஆண் பெற்றவன் ஆண்மகனே
ஆம் உன் பெயர் எந்திரனே

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி
வான் போன்றது எனது வெளி
நான் நாளைய ஞான ஒலி

நீ கொண்டது உடல் வடிவம்
நான் கொண்டது பொருள் வடிவம்
நீ கண்டது ஒரு பிறவி
நான் காண்பது பல பிறவி

ரோபோ ரோபோ பன்மொழிகள் கற்றாலும்
என் தந்தை மொழி தமிழ் அல்லவா
ரோபோ ரோபோ பல கண்டம் வென்றாலும்
என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா


காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை-எந்திரன்


படம்: எந்திரன்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ஷ்ரேயா கோஷல்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடல்: வைரமுத்து

காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
ஹையோ

சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா

நீ நியூட்டன் நியூட்டனின் விதியா
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா

நீ முற்றும் அறிவியல் பித்தன்
ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்
உன்னால்
தீம் தோம் தோம்
தீம் தோம் தோம்
தீம் தோம் தோம்
மனதில் சத்தம்
தேன் தேன் தேன்
இதழில் யுத்தம்
ரோஜாப் பூவில் ரத்தம்
தீம் தோம் தோம்
மனதில் சித்தம்

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
கால்களைக் கொண்டுதான் ருசியறியும்
காதல் கொள்ளும் மனிதப்பூச்சி
கண்களைக் கொண்டுதான் ருசியறியும்

ஓடுகிற தண்ணியில் தண்ணியில்
ஆக்சிஜன் மிக அதிகம்
பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்
ஆசைகள் மிக அதிகம்

ஆசையே வா.. வா
ஆயிரம் காதலை ஐந்தே
நொடியில் செய்வோம்
பெண்ணே வா.. வா.. வா

காதல்காரா
நேசம் வளர்க்க ஒரு
நேரம் ஒதுக்கு எந்தன்
நெஞ்சம் வீங்கி விட்டதே

காதல்காரி
உந்தன் இடையைப் போல
எந்தன் பிழைப்பில் கூட
காதலின் நேரமும் இளைத்துவிட்டதே

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி




காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் காந்தக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
அன்பே

சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா

நீ நியூட்டன் நியூட்டனின் விதியா
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

இவன் பேரைச் சொன்னதும் பெருமை சொன்னதும்-எந்திரன்


படம்: எந்திரன்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
பாடல்: வைரமுத்து

இவன் பேரைச் சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்

இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்

இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்

இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்

அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்

அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா

உன் போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா

ராஜாத்தீ உலோகத்தில்
ஆசைத்தீ மூளுதடி
நான் அட்லாண்டிக்கை ஊற்றி பார்த்தேன்
அக்கினி அணையலையே
உன் பச்சைத் தேனை ஊற்று
என் இச்சைத் தீயை ஆற்று
அடி கச்சைக் கனியே பந்தி நடத்து
கட்டில் இலை போட்டு

அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன் போல் பொன்மான் கிடைத்தால் சும்மா விடுமா

இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்

இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்

அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்

சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே

ராட்ஷசன் வேண்டாம் ரசிகன் வேண்டும்
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே

நான் மனிதன் அல்ல
அஃறிணையின் அரசன் நான்
காமுற்ற கணிணி நான்
சின்னஞ் சிறுசின் இதயம் தின்னும்
சிலிகான் சிங்கம் நான்

எந்திரன்... எந்திரன்
எந்திரா... எந்திரா
எந்திரா... எந்திரா
எந்திரா... எந்திரா

அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன் போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா

இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்

இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்

அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்

மேகத்தை உடுத்தும் மின்னல்தான் நானென்று
ஐசுக்கே ஐசை வைக்காதே

வயரெல்லாம் ஓசை உயிரெல்லாம் ஆசை
ரோபோவைப் போ...போ..வென்னாதே

ஏ ஏழாம் அறிவே
உள் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய்
நீ உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நானென்றாய்

இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்

இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்

அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்

அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன் போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா

எந்திரன்... எந்திரன்
எந்திரா... எந்திரா
எந்திரா... எந்திரா
எந்திரா... எந்திரா


பூம் பூம் ரோபோ-எந்திரன்


படம் :எந்திரன்
பாடியவர்கள் : கீர்த்தி சகாத்தியா,ஸ்வேதா மோகன், தன்வீஷா,யோகி.
இசை: ஏ.ஆர்.ரகுமான்.
பாடல் : கார்க்கி

Boom Boom Robo-da Robo-da Robo-da
Zoom Zoom Robo-da Robo-da Robo-da
Boom Boom Robo-da Robo-da Robo-da
Zoom Zoom Robo-da Robo-da Robo-da

ஐசக் அசிமோவின் வேலையோ ரோபோ
ஐசக் நியூட்டனின் லீலையோ ரோபோ
ஆல்பர்ட் ஐன்ஸ்டானின் மூளையோ ரோபோ
ஹே ரோபோ... ஹே ரோபோ...
ஹே இன்பா நண்பா Come -on Lets Go

ரோபோ நீ அ ஃறிணையோ....
சிட்டி நீ உயர்திணையோ....

மின்சாரம் உடலில் ரத்தம்
நவீன உலகத்தில் அறிவியல் அதிசயம்

வாயுண்டு ஆனால் வயிறில்லை
பேச்சுமுண்டு மூச்சில்லை
நாடி உண்டு இருதயம் இல்லை
பவர்தான் உண்டு திமிரே இல்லை

சிக்கி முக்கி அக்கினி வழி வழியே
ஒருவனின் காதலில் பிறந்தவனே

ஏ... எஃக்கினிலே...
பூத்தவனோ...
எங்களின் காதலை சேர்த்தவனோ

திருமணத் திருநாள்
தெரியும் முன்னே
நீ எங்கள் பிள்ளையோ


சிட்டி சிட்டி ரோபோ - ஏ
சுட்டி சுட்டி ரோபோ
பட்டி தொட்டி எல்லாம் - நீ
பட்டுக் குட்டியோ
சிட்டி சிட்டி ரோபோ - ஏ
சுட்டி சுட்டி ரோபோ
பட்டி தொட்டி எல்லாம் - நீ
பட்டுக் குட்டியோ
Boom Boom Robo-da Robo-da Robo-da
Zoom Zoom Robo-da Robo-da Robo-da

குட்டி குட்டி பட்டனில்
வாய் மூடும்
காதலி இதுபோல்
கிடையாதோ?

ஏ... சொல்வதெல்லாம்
கேட்டுவிடும்
காதலன் இதுபோல்
அமையாதோ?

தவமின்றி வரங்கள்
தருவதனால்
மின்சார
கண்ணனோ?

ஆட்டோ ஆட்டோக்கார - ஏ
ஆட்டோமெட்டிக் காரா
கூட்டம் கூட்டம் பாரு - உன்
autograph க்கா

ஆட்டோ ஆட்டோக்கார - ஏ
ஆட்டோமெட்டிக் காரா
கூட்டம் கூட்டம் பாரு - உன்
autograph க்கா

Boom Boom Robo-da Robo-da Robo-da
Zoom Zoom Robo-da Robo-da Robo-da

ஐசக அசிமோவின் வேலையோ ரோபோ
ஐசக் நியூட்டனின் லீலையோ ரோபோ
ஆல்பர்ட் ஐன்ஸ்டானின் மூளையோ ரோபோ
ஹே ரோபோ... ஹே ரோபோ...
இன்பா நண்பா Come -on Lets Go

Boom Boom Robo-da Robo-da Robo-da
Zoom Zoom Robo-da Robo-da Robo-da
Boom Boom Robo-da Robo-da Robo-da
Zoom Zoom Robo-da Robo-da Robo-da



மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்-படையப்பா


படம் : படையப்பா
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : ஸ்ரீநிவாஸ், நித்யஸ்ரீ மகாதேவன்

மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்
மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில் நான் வெயில் காயவேண்டும்
சகியே... சகியே... சகியே...
என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வேண்டும்

மின்சார கண்ணா
மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்
கூந்தலில் விழும் பூக்களை நீ மடி ஏந்த வேண்டும்
நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும்
மதனா... மதனா... மதனா...
என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும்
மின்சார கண்ணா

ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிக்கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்
ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிக்கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்
என் ஆடைதாங்கிக் கொள்ள என் கூந்தல் ஏந்திக் கொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா
நான் உண்ட மிச்ச பாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால்
மோட்சங்கள் உனக்கல்லாவா
வானம் வந்து வளைகிறதே வணங்கிட வா

மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்

வெண்ணிலவை தட்டி தட்டி செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன்
அதன் விழிகளில் வழிவது அமுதல்ல விஷம் என்று கண்டேன்
அதன் நிழலையும் தொடுவது பழியென்று விலகி விட்டேன்
வாள் விழியால் வலை விரித்தாய் வஞ்சனை வெல்லாது
வலைகளிலே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது
வா என்றால் நான் வருதில்லை
போ என்றால் நான் மறைவதில்லை
இது நீ நான் என்ற போட்டி அல்ல
நீ ஆணையிட்டு சூடிக் கொள்ள ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல

மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்