Showing posts with label கஜினி. Show all posts
Showing posts with label கஜினி. Show all posts
Saturday, September 29, 2012
ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலையுதிர் காலம்-கஜினி
படம் : கஜினி
பாடல் : ஒரு மாலை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : கார்த்திக்
ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலையுதிர் காலம்
சற்றுத் தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே
அவள் அள்ளிவிட்ட பொய்கள்
நடுநடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு
கேட்டுக்கொண்டே நின்றேன்
அவள் நின்றுபேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சர்க்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே
கண்டேனே கண்டேனே
ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலையுதிர் காலம்
சற்றுத் தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே
பார்த்துப் பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவனை மாற்றிவிட்டாய்
சாலைமுனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டிவிட்டாய்
கூச்சம் கொண்ட தென்றலா
இவள் ஆயுள்நீண்ட மின்னலா
உனக்கேற்ற ஆணாக
எனை மாற்றிக் கொண்டேனே
பேசும் அழகினைக் கேட்டு ரசித்திட
பகல்நேரம் மொத்தமாய்க் கழித்தேனே
தூங்கும் அழகினைப் பார்த்து ரசித்திட
இரவெல்லாம் கண்விழித்துக் கிடப்பேனே
பனியில் சென்றால் உன்முகம்
என்மேலே நீராய் இறங்கும்
ஓ தலைசாய்த்துப் பார்த்தாளே
தடுமாறிப் போனேனே
சுட்டும் விழிச்சுடரே சுட்டும் விழிச்சுடரே-கஜினி
படம் : கஜினி
பாடல் : சுட்டும் விழிச்சுடரே
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி, பாம்பே ஜெயஸ்ரீ
சுட்டும் விழிச்சுடரே சுட்டும் விழிச்சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டைப்பையில் உன் படம்
தொட்டுத்தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொள்ளுதே
உன்விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன் உன்னாலே
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
(சுட்டும் விழிச்சுடரே)
மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லையென்றேன்
தூக்கத்தில் உளறல் கொண்டேன்
தூரலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவைக் கொண்டேன்
கருப்புவெள்ளை பூக்கள் உண்டா
உன்கண்ணில் நான் கண்டேன்
உன்கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்
உன்கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்
(சுட்டும் விழிச்சுடரே)
மரங்கொத்திப் பறவை ஒன்று
மனங்கொத்திப் போனதின்று
உடல்முதல் உயிர்வரை தந்தேன்
தீயின்றித் திரியுமின்றி
மேகங்கள் எரியும் என்று
இன்றுதானே நானும் கண்டுகொண்டேன்
மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும்போது மழை அழகு
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு
(சுட்டும் விழிச்சுடரே)
Subscribe to:
Posts (Atom)