Saturday, September 29, 2012

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு-அலைபாயுதே


படம் : அலைபாயுதே
பாடல் : காதல் சடுகுடு
இசை : A.R. Rahman
பாடியவர்கள் : S.P.B. சரண், நவீன்

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய்
மெதுவாய்ப் படர்வாய் என்றால்
நுரையாய்க் கரையும் அலையே
தொலைவில் பார்த்தால்
ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால் இல்லை என்றாய்
நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி
என்னைக் கொல்வாய் கண்ணே
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்
நானாக தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்
நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய்
என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே
என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே
என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே
நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி
என்னைக் கொல்வாய் கண்ணே
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே
உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே
நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி
என்னைக் கொல்வாய் கண்ணே
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

பச்சை நிறமே பச்சை நிறமே-அலைபாயுதே


படம் : அலைபாயுதே
பாடல் : பச்சை நிறமே
இசை : A.R. Rahman
பாடியவர்கள் : ஹரிஹரன், கிளிண்டன்

சகியே சிநேகிதியே
காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே சிநேகிதியே
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

பச்சை நிறமே பச்சை நிறமே
இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே
பச்சை நிறமே பச்சை நிறமே
இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே
எனக்கு சம்மதம் தருமே
எனக்கு சம்மதம் தருமே

கிளையில் காணும் கிளியின் மூக்கு
விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா
பூமி தொடாத பிள்ளையின் பாதம்
எல்லா சிவப்பும் உந்தன் கோபம்
எல்லா சிவப்பும் உந்தன் கோபம்

அந்தி வானம் அரைக்கும் மஞ்சள்
அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத்தோடு ஜனித்த மஞ்சள்
கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள்
எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்

சகியே சிநேகிதியே
காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

அலையில்லாத ஆழி வண்ணம்
முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்
குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்

இரவின் நிறமே இரவின் நிறமே
கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே
பெண்மை எழுதும் கண்மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே

சகியே சிநேகிதியே
காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே சிநேகிதியே
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே
மழையில் முளையும் தும்பை நிறமே
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே
விழியில் பாதி உள்ள நிறமே
மழையில் முளையும் தும்பை நிறமே
உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே

அலைபாயுதே கண்ணா-அலைபாயுதே


படம் : அலைபாயுதே
பாடல் : அலைபாயுதே கண்ணா
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : கல்யாணி மேனன், ஹரிணி, நெய்வேலி ராமலஷ்மி

அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ

நிலைபெயறாது சிலைபோலவே நின்று
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா
என்மனம் அலைபாயுதே கண்ணா ஆ ஆ

தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே
திக்கைநோக்கி என்புருவம் நெறியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கதறிமனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ (2)
குழலூதிடும்பொழுது ஆடிகும் குழைகள்போலவே மனது வேதனைமிகவொடு
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ

நேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழைவதேனோ-

படம் : அலைபாயுதே
பாடல் : சினேகிதனே
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : சாதனா சர்கம், ஸ்ரீநிவாஸ்

நேற்று முன்னிரவில் உன்னி
நேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழைவதேனோ
உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பதேனோ
மனம் கலங்கி புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி

சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள்
செவிகொடு சினேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம்
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டுமே
சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே

சின்னச்சின்ன அத்துமீறல் புரிவாய்
என் Cell எல்லாம் பூக்கள் பூக்கச்செய்வாய்
மலர்களில் மலர்வாய்
பூப்பரிக்கும் பக்தன்போல மெதுவாய்
நான் தூங்கும்போது விரல்நகம் களைவாய்
சத்தமின்றி துயில்வாய்
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி
சேவைகள் செய்யவேன்டும்
நீயழும்போது நான் அழ நேர்ந்தால்
துடைக்கின்ற விரல் வேண்டும்
சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள்
செவிகொடு சினேகிதனே
(நேற்று முன்னிரவில்)

சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்
காதில் கூந்தல் நுழைப்பேன்
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
உப்புமூட்டை சுமப்பேன்
உன்னையள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து
கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்
வெளிவரும்போது விடுதலை செய்து
வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன்
(சினேகிதனே)

மின்னும் பனிச் சாறு உள் நெஞ்சில் சேர்ந்தாளே- பச்சைக்கிளி முத்துச்சரம்


படம் : பச்சைக்கிளி முத்துச்சரம்
பாடல் : உனக்குள் நானே
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ

மின்னும் பனிச் சாறு உள் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்துக் கொண்டாளே
வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே

பொன் மான் இவளா...
உன் வானவில்லா...
பொன் மான் இவளா...
உன் வானவில்லா...

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா

சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா
சொல்லா சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேனல்லவா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா

ஏனோ நம் பொய் வார்த்தைதான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பைத் தந்தாய்
மனதில் கனத்தைத் தந்தாய்
ஒரு முறை உன்னை எனக்கென்று சுவாசிக்கவா
மறுமுறை உன்னை புதிதாக சாசிக்கவா
(உனக்குள் நானே)


தீப்போல் தேன்போல் சலனமேதான்
மதி என் நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டுச்சென்றாயே
நினைவை வெட்டிச்சென்றாயே
இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா
அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா
(உனக்குள் நானே)

காதல் கொஞ்சம் காற்றுக் கொஞ்சம்- பச்சைக்கிளி முத்துச்சரம்


படம் : பச்சைக்கிளி முத்துச்சரம்
பாடல் : காதல் கொஞ்சம்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : நரேஷ் ஐயர்

காதல் கொஞ்சம் காற்றுக் கொஞ்சம்
சேர்த்துக்கொண்டு செல்லும் நேரம்
தூரம் எல்லாம் தூரம் இல்லை
தூவானமாய் தூவும் மழை

அலுங்காமல் உனை அள்ளி
தொடுவானம்வரை செல்வேன்
விடிந்தாலும் விடியாத பொன்காலையைக்
காணக் காத்திருப்பேன்
(காதல் கொஞ்சம்)

எதிர்காலம் வந்து என்னை முட்டுமோ
தன் கையை நீட்டி நீட்டி என்னை கட்டிக்கொள்ளுமோ
கொஞ்சம் மிச்சமுள்ள அச்சம் தள்ளுமோ
என் துணிச்சலின் விரல்தொட இனி கிள்ளுமோ
அறியாத புதுவாசம் அகமெங்கும் இனி வீசும்
அதில்தானே கரைந்தோடும் நம் வாழ்வின் வனவாசம்
(காதல் கொஞ்சம்)

கையில் வந்த முத்துச்சரம் சிந்தாமல்
என் உள்ளங்கையின் வெப்பத்திலே ஒட்டிக்கொள்ளுமே
எழில்கொஞ்சும் பச்சைக்கிளி வந்தாலும்
என் வேடந்தாங்கல் வேண்டாம் வேண்டாம் என்று தள்ளுமே
தேய்கின்ற நிலவோடு தேயாத கனவோடு
தோள் சேர்த்து நடப்பேனே என் தூரம் கடப்பேனே
(காதல் கொஞ்சம்)

கருகரு விழிகளால்-பச்சைக்கிளி முத்துச்சரம்


படம் : பச்சைக்கிளி முத்துச்சரம்
பாடல் : கரு கரு விழிகளால்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : நரேஷ் ஐயர், கிருஷ், கார்த்திக்

கருகரு விழிகளால்
ஒரு கண்மை என்னைக் கடத்துதே
ததும்பிடத் ததும்பிட
சிறு அமுதம் என்னைக் குடிக்குதே
இரவினில் உறங்கையில்
என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில்
ஒரு மின்னல் வந்து சாய்க்க

நீ ஒரு மல்லிச்சரமே
நீ இலைசிந்தும் மரமே
என் புது வெள்ளிக்குடமே
உன்னைத்தேடும் கண்கள்
ஏன் நீ தங்கச்சிலையா
வெண் நுரை பொங்கும் மலையா
மன் மதன் பின்னும் வலையா
உன்னைத்தேடும் கண்கள்

புதுப்புது வரிகளால் என் கவிதைத்தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
தாமரையிலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல்தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா
(நீ ஒரு மல்லிச்சரமே)

ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
மறுநாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும்போதே இன்னும் ஏதோ தேடும்
கையின் ரேகைபோலே கள்ளத்தனம் ஓடும்
நீரே இல்லா பாலையிலே
நின்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே உச்சுக்கொட்டி
தொடர்ந்திடும் பிழை பிழை
(கருகரு விழிகளால்)

தாமரையிலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல்தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா

தாமரையிலை நீர் நீதானா ஒரு மல்லிச்சரமே
தனியொரு அன்றில் நீதானா இலைசிந்தும் மரமே
புயல்தரும் தென்றல் நீதானா புது வெள்ளிக்குடமே
புதையல் நீதானா (மதன் பின்னும் வலையா
ஒரு மல்லிச்சரமே

மின்னும் பனிச் சாறு உள் நெஞ்சில் சேர்ந்தாளே-பச்சைக்கிளி முத்துச்சரம்


படம் : பச்சைக்கிளி முத்துச்சரம்
பாடல் : உனக்குள் நானே
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ

மின்னும் பனிச் சாறு உள் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்துக் கொண்டாளே
வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே

பொன் மான் இவளா...
உன் வானவில்லா...
பொன் மான் இவளா...
உன் வானவில்லா...

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா

சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா
சொல்லா சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேனல்லவா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா

ஏனோ நம் பொய் வார்த்தைதான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பைத் தந்தாய்
மனதில் கனத்தைத் தந்தாய்
ஒரு முறை உன்னை எனக்கென்று சுவாசிக்கவா
மறுமுறை உன்னை புதிதாக சாசிக்கவா
(உனக்குள் நானே)

தீப்போல் தேன்போல் சலனமேதான்
மதி என் நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டுச்சென்றாயே
நினைவை வெட்டிச்சென்றாயே
இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா
அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா
(உனக்குள் நானே)

முதல்முதலாக முதல்முதலாக-உன்னாலே உன்னாலே


படம் : உன்னாலே உன்னாலே
பாடல் : உன்னாலே உன்னாலே
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : கார்த்திக், கிருஷ், ஹரிணி

முதல்முதலாக முதல்முதலாக
பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே
தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன்வசமாக வா வா வா அன்பே

உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய் தாழ நின்றேனே

ஒரு சொட்டுக்கடலும் நீ ஒரு பொட்டுவானம் நீ
ஒரு புள்ளிப்புயலும் நீ பிரமித்தேன்
ஹோ ஒளிவீசும் இரவும் நீ உயிர்கேட்கும் அமுதம் நீ
இமைமூடும் விழியும் நீ யாசித்தேன்
(முதல்முதலாக)
(முதல்முதலாக)

ஒரு பார்வையின் நீளத்தை ஒரு வார்த்தையின் ஆழத்தை
தாங்காமல் வீழ்ந்தேனே தூங்காமல் வாழ்ந்தேனே
நதிமீது சருகைப்போல் உன்பாதை வருகின்றேன்
கடைத்தேற்றிவிடுவாயோ கதிமோட்சம் தருவாயோ
மொத்தமாய் மொத்தமாய் நான் மாறிப்போனேனே
சுத்தமாய் சுத்தமாய் தூள்தூளாய் ஆனேனே
(முதல்முதலாக)

நீ என்பது மழையாக நான் என்பது வெயிலாக
மழையோடு வெயில்சேரும் அந்த வானிலை சுகமாகும்
சரியென்று தெரியாமல் தவறென்று புரியாமல்
எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான்
என்வசம் என்வசம் இரண்டடுக்கு ஆகாயம்
இரண்டிலும் போகுதே என்காதல் கார்மேகம்
(உன்னாலே உன்னாலே)

ஜூன் போனால் ஜூலைக் காற்றே-உன்னாலே உன்னாலே


படம் : உன்னாலே உன்னாலே
பாடல் : ஜூன் போனால்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : கிருஷ், அருண்

ஜூன் போனால் ஜூலைக் காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூப்பூத்தால் தேன் வருமே
பெண்பார்த்தால் தீ வருமே
என்னாச்சு தோணலியே
(check it up,check it up)
ஏதாச்சு தெரியலியே
நட்பாச்சு லவ்வில்லையே
லவ்வாச்சு நட்பில்லையே

நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்றுமட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழாமொத்தக்கூத்துக்கள் யாருக்காக
மொத்தபூமியும் கூத்துக்காகத்தான் அன்பே
(நேற்று என்பதும்)
(ஜூன் போனால்)

அறைக்குள்ளே மழைவருமா வெளியே வா குதூகலமா
இந்த பூமிப்பந்துஎங்கள் கூடைப்பந்து
அந்த வானம் வந்துகூரை செய்ததின்று
கரையிருக்கும் நிலவினை சலவை செய்
சிறையிருக்கும் மனங்களை பறவை செய்
எந்த மலர்களும் கண்ணீர் சிந்திக் கண்டதில்லையே
(ஜூன் போனால்)

இருப்போமா வெளிப்படையாய் சிரிப்போமா மலர்க்குடையாய்
சிற்பி விரல்களோ சிலை செதுக்குமே
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே
ரொம்பக்காதலை இந்த பூமி கண்டிருக்கும்
பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்
இந்த உலகத்தில் எவருமே ராமனில்லை
(ஜூன் போனால்)


இளமை உல்லாசம் ஒரு நொடியினில் முடிந்து நேரம் ஆச்சோ-உன்னாலே உன்னாலே


படம் : உன்னாலே உன்னாலே
பாடல் : இளமை உல்லாசம்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : கிருஷ், ஷாலினி

இளமை உல்லாசம் ஒரு நொடியினில் முடிந்து நேரம் ஆச்சோ
இனிமேல் உற்சாகம் கைப்பிடியினில் இருந்து ஓடிப்போச்சோ

பழைய வார்த்தை இல்லாமல் திணறினோம்
புதிய பாடல் பாடத்தான் விரும்பினோம்
அழகுப்பூக்கள் முகம்பார்த்து மயங்கினோம்
இனி சாரல்தான் பூத்தூறல்தான் அத்துமீறல்தான்

ஓ தேன்நிலவுகள் நிலவுகள் காதல்காற்றில் மிதந்ததே
ஓ வான்பறவைகள் பறவைகள் காதல்வானில் கலந்ததே

ஓ தேன்நிலவுகள் நிலவுகள் காதல்காற்றில் மிதந்ததே
ஓ வான்பறவைகள் பறவைகள் காதல்வானில் கலந்ததே

Hello Miss இம்சையே ஆனந்தத் தொல்லையே-உன்னாலே உன்னாலே


படம் : உன்னாலே உன்னாலே
பாடல் : Hello Miss
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : G.V. பிரகாஷ், அனுஷ்கா

Hello Miss இம்சையே ஆனந்தத் தொல்லையே
அக்கரைப் பச்சையே பெண்ணே
விழியென்ன பாசியா விழுவோமே ஜாலியா
ஏமாறும் ராசியா ஆணே

அங்கிட்டுக் கொஞ்சம் இங்கிட்டுக் கொஞ்சம்
பார்த்தது எல்லாம் பொய்யா
கற்கண்டுப் பேச்சும் பூச்செண்டு வீச்சும்
நம்பிவிடாதே பையா
அம்மான் மகளே அம்மான் மகளே
அன்பாய் அழகாய் வீசும் புயலே
அம்மான் மகளே அம்மான் மகளே
என்னை அசத்தும் ஆழ்வார் குழலே

அன்புக்கு நீங்கள்தான் அஸ்திவாரம்
வம்புக்கும் நீங்கள்தான் அடிவாரம்
நட்பென்று சுற்றுவீர் முதல்வாரம்
சட்டென்று பார்வைகள் இடம் மாறும்
அழகான அலர்ஜி நீங்கள்
ஆனாலும் Energy நீங்கள்
Time என்ன கேட்டால் வழியுற மனமே
ஒருமுறை பார்த்தால் அலையுற தினமே
(Hello Miss)

கண்களால் முதலில் புன்னகைப்போம்
பின்புதான் கண்களில் மழை வடிப்போம்
உங்களை நம்பித்தான் கையை பிடிப்போம்
அய்யய்யோ தப்பென்று கண்கள் துடைப்போம்
உதட்டோடு உதட்டுச்சாயம்
ஆண்நெஞ்சில் ஆறாக்காயம்
கொஞ்சலும் ஏனோ கெஞ்சலும் ஏனோ
நீயோ நானோ மிஞ்சலும் நோ நோ
(Hello Miss)

முதல்நாள் இன்று எதுவோ ஒன்று-உன்னாலே உன்னாலே


படம் : உன்னாலே உன்னாலே
பாடல் : முதல்நாள் இன்று
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : மஹாலக்ஷ்மி, K K, ஷாலினி

முதல்நாள் இன்று எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனலேற்றலாம்

என் உள்ளம் பாடுகின்றது
யார் சொல்லிக் கற்றுக்கொண்டது
நில் என்றால் சட்டென்று நிற்காதம்மா
நான் என்ன சொன்னாலும் கேட்காதம்மா
ஓஹோ Jaane Jaan
(முதல்நாள் இன்று)

திசைதோறும் கூறுகின்ற உண்மை
குளிர்போலே காதல் மிக மென்மை
தீண்டுகையில் தித்திக்காதோ சொல் உள்ளம்
முழுதாக மூழ்கியதும் இல்லை
மூழ்காமல் மிதந்ததும் இல்லை
காதல்கடல் விழுந்தவர் காணும் நிலை
ஓ ஓ ஓ வெகுதூரம் வந்தேன்
காதல் கிருமிகள் நெருங்காமல்
முதல்நாள் இன்று எதுவோ ஒன்று
லேசாக எனை மாற்றலாம்
அங்கங்கு அனலேற்றலாம்

இளம்நெஞ்சில் காதல்விதை தூவு
இல்லையேல் நீ தன்னந்தனித் தீவு
வாழ்க்கை ஒரு சுமையாகாதோ சொல்லு ஹோ
உதட்டாலே காதலெனும் சொல்லை
உரைத்தாலே கூட வரும் தொல்லை
வாழும்மட்டும் விழிகளின் தூக்கம் கெடும்
சுகமேது வாழ்வில் காதல் வலியை சுமக்காமல்
(முதல்நாள் இன்று)

உப்புக்கல் வைரம் என்றுதான்
காட்டிடும் காதல் ஒன்றுதான்
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்
என்றாலும் துன்பம்தான் மிச்சம் மிச்சம்
ஓஹோ கோரியே ஓசனா சோனா
ஓசனா சோனா ஓசனா சோனா ஓசனா சோனா

வைகாசி நிலவே வைகாசி நிலவே-உன்னாலே உன்னாலே


படம் : உன்னாலே உன்னாலே
பாடல் : வைகாசி நிலவே
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிசரண், மதுஸ்ரீ

வைகாசி நிலவே வைகாசி நிலவே
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன

வெட்கத்தை உடைத்தாய்
தீக்குள்ளே அடைத்தாய்
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட நான்
தள்ளாடித் தத்தளிக்கும் நேரம்

விழியில் இரண்டு விலங்கு இருக்கு
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு
என் ஜீவன் வாழும்வரை
ஓ என் செய்வாய் நாளும் எனை
(வைகாசி நிலவே)

தூவானம் என தூறல்கள் விழ
தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பியதே
கண்ணா நீ பொறு கட்டுக்குள் இரு
காதல் கைகூடட்டும்
இதோ எனக்காக விரிந்தது இதழ்
எடுக்கவா தேனே
கனி எதற்காக கனிந்தது
அணில் கடித்திடத்தானே
ஹோ காலம் நேரம் பார்த்துக்கொண்டா
காற்றும் பூவும் காதல் செய்யும்
(வைகாசி நிலவே)

நூலாடையென மேலாடையென
பாலாடை மேனிமீது படரட்டுமா
நானென்ன சொல்ல நீ என்னை மெல்ல
தீண்டித் தீவைக்கிறாய்
அனல் கொதித்தாலும் அணைத்திடும்
புனல் அருகினில் உண்டு
அணை நெருப்பாக இருக்கையில்
எனை தவிப்பதுகண்டு
ஹோ மோகத்தீயும்
தேகத்தீயும் தீர்த்தம் வார்த்துத் தீராதம்மா
(வைகாசி நிலவே)
(வெட்கத்தை உடைத்தாய்)

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்-தீனா


படம் : தீனா
பாடல் : சொல்லாமல் தொட்டு
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் : ஹரிஹரன்

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டிச் செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னைக் கொல்ல கொல்ல
இந்தக் காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்
(சொல்லாமல்)

ஓ காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
அமிலம் அருந்திவிட்டேன்
ஓ நெருப்பை விழுங்கிவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூப் பறித்தவள் நீதானே
(சொல்லாமல்)

ஓ பெண்களின் உள்ளம் படுகுழியென்பேன்
விழுந்து எழுந்தவன் யார்
ஆழம் அளந்தவன் யார்
ஓ கரையைக் கடந்தவன் யார்
காதல் இருக்கும் பயத்தினில்தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன்தான் அலைவான் வீதியிலே
(சொல்லாமல்)

சிறகுகள் நீளுதே பறவைகள் போலவே-காக்க காக்க


படம் : காக்க காக்க
பாடல் : என்னைக் கொஞ்சம்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : திப்பு, ஷாலினி சிங், டிம்மி

சிறகுகள் நீளுதே பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே துள்ளித்துள்ளிப் போகுதே
புதுவித அனுபவம் நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும் அள்ளி அள்ளிப் பருகுதே

என்னைக் கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா
இன்று காணும் நானும் நானா
உன் பேச்சில் என்னை வீழ்த்திச் செல்லாதே

ஒண்ணே ஒண்ணு சொல்லணும்
ஒண்ணே ஒண்ணு சொல்லணும்
உன் முகத்தைப் பார்த்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்கக் கூடாதா
நானும் மாறிப் போனதேன்
என் நளினம் கூடிப் போனதேன்
அது தெரிந்தால் நீயே சொல்லக் கூடாதா
ஓ வாஹா ஓ வாஹா யாரை நான் கேட்பேன்
நீ சொல்வாயா
(என்னைக் கொஞ்சம்)

வருகிற வழிகளில் மலர்களின் கூட்டமுண்டு
ஒருமுறைகூட நின்று ரசித்ததில்லை
இன்றுமட்டும் கொஞ்சம் நின்று
ஒரு பூவைக் கிள்ளிக்கொண்டு
சிரிப்புடன் செல்வேனென்று நினைத்ததில்லை இல்லை
நீ கிள்ளும் பூக்களே நான் சூடிக் கொள்ளவே
என்கின்ற எண்ணம் இன்று வந்தாச்சே
ஆனாலும் நேரிலே எப்போதும்போலவே
இயல்பாகப் பேசிப்போவது என்றாச்சே
(என்னைக் கொஞ்சம்)

என்னை இங்கே வரச்செய்தாய்
என்னெனவோ பேசச்செய்தாய்
புன்னகைகள் பூக்கச்செய்தாய் இன்னும் என்ன
அருகினில் அமர்ந்தென்னை
உற்று உற்று பார்க்கும் உந்தன்
துருதுரு பார்வைக்குந்தான் அர்த்தம் என்ன என்ன
என் பார்வை புதுசுதான்
என் பேச்சும் புதுசுதான்
உன்னாலே நானும் மாறிப்போனேனே
கூட்டத்தில் என்னைத்தான்
உன் கண்கள் தேடணும்
என்றெல்லாம் எண்ணும் பைத்தியம் ஆனேனே
(என்னைக் கொஞ்சம்)

ஒன்றா ரெண்டா ஆசைகள்-காக்க காக்க


படம் : காக்க காக்க
பாடல் : ஒன்றா ரெண்டா
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ

ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில்... நான் கண்ட.. நாளிதுதான் கலாபக்காதலா
பார்வைகளால்... பலகதைகள்.. பேசிடலாம் கலாபக்காதலா
(ஒன்றா ரெண்டா)

பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேராய் பார்த்துதான்
நீ பேசும் தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே
என் மனசில் மழையடிக்கும்
மிகப்பிடித்த பாடலொன்றை
உதடுகளும் முணுமுணுக்கும்
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்
உனது கண்களில் எனது கனவினை காணபோகிறேன்
(ஒன்றா ரெண்டா)

சந்தியாக்கால மேகங்கள்
பொன்வானில் ஊர்வலம் போகுதே
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே
உன் நடையின் சாயலே தோணுதே
நதிகளிலே நீராடும்
சூரியனை நான் கண்டேன்
வேர்வைகளின் துளிவழிய
நீ வருவாய் என நின்றேன்
உன்னால் என் நெஞ்சில் ஆணின் மணம்
நானுன் சொந்தம் என்ற எண்ணம் தரும்
மகிழ்ச்சி மீறுதே
வானைத் தாண்டுதே
சாகத் தோன்றுதே
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில்... நான் கண்ட.. நாளிதுதான் கலாபக்காதலா
பார்வைகளால்... பலகதைகள்.. பேசிடலாம் கலாபக்காதலா

ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே-காக்க காக்க


படம் : காக்க காக்க
பாடல் : ஒரு ஊரில்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : கார்த்திக்

She is a fantasy shanana nana oh oh
Sweet as a harmony shanana nana oh oh
No no no she is a mystery shanana nana oh oh
Fills your heart with ecstasy oh oh yeah yeah hey

ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே
பல வருட பரிச்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள்தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
(ஒரு ஊரில்)

மரகத சோம்பல் முறிப்பாளே
புல்வெளி போலே சிலிர்ப்பாளே
விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசும்போதிலே
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே
அவள் கன்னத்தின் குழியில்
சிறு செடிகளும் நடலாம்
அவள் கன்னத்தின் குழியில் அழகழகாய்
சிறு செடிகளும் நடலாம் விதவிதமாய்
ஏதோ ஏதோ தனித்துவம் அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே
(ஒரு ஊரில்)

மகரந்தம் தாங்கும் மலர்போலே
தனி ஒரு வாசம் அவள்மேலே
புடவையின் தேர்ந்தமடிப்பில் விசிறிவாழைகள்
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல்காடுகள்
அவள் கடந்திடும்போது
தலை அணிச்சையாய் திரும்பும்
அவள் கடந்திடும்போது நிச்சயமாய்
தலை அணிச்சையாய் திரும்பும் அவள்புறமாய்
என்ன சொல்ல என்ன சொல்ல
இன்னும் சொல்ல மொழியினில் வழி இல்லையே
அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே
பல வருட பரிச்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள்தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
முதல்முதல் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே

உயிரின் உயிரே உயிரின் உயிரே-காக்க காக்க


படம் : காக்க காக்க
பாடல் : உயிரின் உயிரே
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : K K, சுசித்ரா

உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்துக்கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரைவாரி
முகத்தில் இறைத்தும்
முழுதும் வேர்க்கின்றேன்
நகரும் நெருப்பாய்க் கொழுந்துவிட்டெரிந்தேன்
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்
காலைப்பனியாக என்னை வாரிக்கொண்டாய்
நேரம்கூட எதிரியாகிவிட
யுகங்களாக வேடம் மாறிவிட
அணைத்துக் கொண்டாயே
பின்பு ஏனோ சென்றாய்
(உயிரின் உயிரே)

சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்திச்செல்ல
கனவு வந்து கண்ணைக்கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னையன்றி யாரைத் தேடும்
விலகிப்போகாதே தொலைந்து போவேனே
நான் நான் நான்
(உயிரின் உயிரே)

இரவின் போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன் உன்னிடம் வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணைமுறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ விரல்கள் தாராயோ
நீ நீ நீ
(உயிரின் உயிரே)

கனாக் காணும் காலங்கள்-7/G ரெயின்போ காலனி


படம் : 7/G ரெயின்போ காலனி
பாடல் : கனாக் காணும்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : ஹரீஷ் ராகவேந்திரா, மதுமிதா, உஸ்தாத் சுல்தான் கான்

கனாக் காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ
விழிபோடும் கடிதங்கள்
வழிமாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ

இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகள் இன்னொரு நரகம்
இளமையின் அதிசயம்
இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும்நெருப்பினை விரல்களும் விரும்பும்
கடவுளின் ரகசியம்

உலகில் மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டு பேசிடும் பாஷை
மெதுவாய் இனி மழைவரும் ஓசை ஆ
(கனாக் காணும்)

நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறென்றால் நட்பு என்று பேரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள் எதைத் தேடி போகிறதோ
திரிதூண்டிப் போன விரல்தேடி அலைகிறதோ

தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவிவந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி இல்லையே ஆ
(கனாக் காணும்)

இது என்ன காற்றில் இன்று ஈரப்பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசிக்கொண்டு அந்திவேளை அழைக்கிறதே
அதிகாலை நேரம் எல்லாம் தூங்காமல் விடிகிறதே
விழிமூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே
நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்

படபடப்பாய் சில கோபங்கள் தோன்றும்
பனித்துளியாய் அது மறைவது ஏன்
நிலநடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மனநடுக்கம் அது மிகக்கொடுமை ஆ
(கனாக் காணும்)

நினைத்து நினைத்து பார்த்தேன்- 7/G ரெயின்போ காலனி


படம் : 7/G ரெயின்போ காலனி
பாடல் : நினைத்து நினைத்து
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : K K

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்துபோன மலரின் மௌனமா
தூதுபேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்துபோன வளையல் பேசுமா
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல்கனவு முடிந்திடும் முன்னமே தூக்கம் கலைந்ததே
(நினைத்து நினைத்து)

பேசிப்போன வார்தைகள் எல்லாம்
காலந்தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா
பார்த்துப்போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா
தொடர்ந்துவந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்துபோகும்
திருட்டுப்போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்

கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை-7/G ரெயின்போ காலனி


படம் : 7/G ரெயின்போ காலனி
பாடல் : கண்பேசும் வார்த்தைகள்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : கார்த்திக்

கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை கடல் கைகூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்தபிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்டபிறகும்
உன்னை உள்மனம் மறப்பதில்லை

ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
(கண்பேசும் வார்த்தைகள்)

காட்டிலே காயும் நிலவு
கண்டுகொள்ள யாரும் இல்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம்
பாதைக்குச் சொந்தமில்லை
மின்னலின் ஒளியை பிடிக்க
மின்மினிப்பூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்குச் சொந்தமடி
வேதனைகள் எனக்குச் சொந்தமடி
அலை கடலைக் கடந்தபின்னே
நுரைகள்மட்டும் கரைக்கே சொந்தமடி
(கண்பேசும் வார்த்தைகள்)

உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒருமுறை வாழ்ந்திடத் திண்டாடுது
இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
பனித்துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்களெல்லாம்
அட புடவைகட்டி பெண்ணானது
ஏ புயல் அடித்தால் மலை இருக்கும்
மரங்களும் பூக்களும் மறைந்துவிடும்
சிரிப்புவரும் அழுகைவரும்
காதலில் இரண்டுமே கலந்துவரும்

ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
(கண்பேசும் வார்த்தைகள்)

இது போர்க்களமா இல்லை தீக்குளமா-7/G ரெயின்போ காலனி


படம் : 7/G ரெயின்போ காலனி
பாடல் : இது போர்க்களமா
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : ஹரீஷ் ராகவேந்திரா

இது போர்க்களமா இல்லை தீக்குளமா
விதி மாற்றிடும் காதல் புரியாதே

தீயின் மனமும் நீரின் குணமும்
எடுத்துச் செய்தவள் நீ நீயா
தெரிந்தப் பக்கம் தேவதையாக
தெரியாப் பக்கம் பேய் பேயா
நேரம் தின்றாய் நினைவைத் தின்றாய்
என்னைத் தின்றாய் பிழையில்லையா
வேலைவெட்டி இல்லாப் பெண்ணெ
வீட்டில் உனக்கு உணவில்லையா
இருவிழி உரசிட ரகசியம் பேசிட
இடிமழை மின்னல் ஆரம்பம்
பாதம் கேசம் நாபிக்கமலம்
பற்றிக்கொண்டதும் பேரின்பம்
தகதகவென எரிவது தீயா
சுடச்சுடவெனத் தொடுவது நீயா
தொடுதொடுவெனச் சொல்லடி மாயா
கொடுகொடுவெனக் கொல்லுகின்றாயா

நண்பர் கூட்டம் எதிரே வந்தால்
தனியாய் விலகி நடக்கின்றேன்
நாளை உன்னைக் காண்பேனென்றே
நீண்ட இரவைப் பொறுக்கின்றேன்
இப்படி இப்படி வாழ்க்கை ஓடிட
இன்னும் என்ன செய்வாயோ
செப்படிவித்தை செய்யும் பெண்ணெ
சீக்கிரம் என்னைக் கொல்வாயோ
எந்தக் கயிறு உந்தன் நினைவை
இறுக்கிப் பிடித்து கட்டுமடி
என்னை எரித்தால் எலும்புக்கூடும்
உன்பேர் சொல்லி அடங்குமடி
படபடவென படர்வதும் நீயா
விடுவிடுவென உதிர்வதும் நீயா
தடதடவென அதிரவைப்பாயா
தனிமையிலே சிதறவைப்பாயா

ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலையுதிர் காலம்-கஜினி


படம் : கஜினி
பாடல் : ஒரு மாலை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : கார்த்திக்

ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலையுதிர் காலம்
சற்றுத் தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே

அவள் அள்ளிவிட்ட பொய்கள்
நடுநடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு
கேட்டுக்கொண்டே நின்றேன்
அவள் நின்றுபேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சர்க்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே
கண்டேனே கண்டேனே

ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலையுதிர் காலம்
சற்றுத் தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே

பார்த்துப் பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவனை மாற்றிவிட்டாய்
சாலைமுனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டிவிட்டாய்
கூச்சம் கொண்ட தென்றலா
இவள் ஆயுள்நீண்ட மின்னலா
உனக்கேற்ற ஆணாக
எனை மாற்றிக் கொண்டேனே

பேசும் அழகினைக் கேட்டு ரசித்திட
பகல்நேரம் மொத்தமாய்க் கழித்தேனே
தூங்கும் அழகினைப் பார்த்து ரசித்திட
இரவெல்லாம் கண்விழித்துக் கிடப்பேனே
பனியில் சென்றால் உன்முகம்
என்மேலே நீராய் இறங்கும்
ஓ தலைசாய்த்துப் பார்த்தாளே
தடுமாறிப் போனேனே

சுட்டும் விழிச்சுடரே சுட்டும் விழிச்சுடரே-கஜினி


படம் : கஜினி
பாடல் : சுட்டும் விழிச்சுடரே
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி, பாம்பே ஜெயஸ்ரீ

சுட்டும் விழிச்சுடரே சுட்டும் விழிச்சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டைப்பையில் உன் படம்
தொட்டுத்தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொள்ளுதே

உன்விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன் உன்னாலே
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
(சுட்டும் விழிச்சுடரே)

மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லையென்றேன்
தூக்கத்தில் உளறல் கொண்டேன்
தூரலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவைக் கொண்டேன்

கருப்புவெள்ளை பூக்கள் உண்டா
உன்கண்ணில் நான் கண்டேன்
உன்கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்
உன்கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்
(சுட்டும் விழிச்சுடரே)

மரங்கொத்திப் பறவை ஒன்று
மனங்கொத்திப் போனதின்று
உடல்முதல் உயிர்வரை தந்தேன்
தீயின்றித் திரியுமின்றி
மேகங்கள் எரியும் என்று
இன்றுதானே நானும் கண்டுகொண்டேன்

மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும்போது மழை அழகு
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு
(சுட்டும் விழிச்சுடரே)

Friday, September 28, 2012

பிடிக்கல்ல மாமு படிக்கிர காலேஜ்


படம்: நீ தானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சுராஜ் ஜெகன்,கார்த்திக்
வரிகள்: நா.முத்துக்குமார்
 
பிடிக்கல்ல மாமு படிக்கிர காலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நொலேஜ்
(பிடிக்கல்ல மாமு)

அடுத்தது booksu வளருது டீனோஜ்
சீக்கிரம் நமக்கு வந்திடும் ஓல்டேஜ்
சிங்கக் குட்டிய புடிசு ஒரு கூண்டில் அடைப்பது பாவம்
வந்த வரைக்கும் நீ booksa
அட எடைக்கு போடு லாபம்
நா டென்ஷ ன் ஆகிட்டேன் பக்கேட்டு பக்கேட்டு
டூருக்கு எடுங்கடா டிக்கெட்டு டிக்கெட்டு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பிடிக்கல்ல மாமு படிக்கிர கோலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நொலேஜ்
அடுத்தது booksu வளருது டீனோஜ் ஹேய்ய

என் வார்த்தை நீ கேட்டு
வெட்டு வெட்டு கல் வெட்டு
யே யே யே யே
யே யே யே யே
எங்கயும் சில் ஒட்டு
இல்லையினா கெட் அவுட்டு
யே யே யே யே
யே யே யே யே
girls நம்ம க்ஸ்சில் இல்ல
என்ற போதும் தப்பு இல்ல
சிங்கலானா பாய்ஸ்க்கு தான்
workoutஆகும் மாப்பிள்ள
நா எறிஞ்சு பாடலாம் விக்கெட்டு விக்கெட்டு
எறங்கி கலக்குடா பக்கெட்டு பக்கெட்டு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பிடிக்கல்ல மாமு படிக்கிர கோலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நொலேஜ்
அடுத்தது booksu வளருது டீனோஜ் ஹேய்ய

உடம்பு சிறகு முளைக்கட்டும்
நரம்பில் குரும்பு இருக்கட்டும்
அடிச்சு புடிச்சு அடிச்சு அடிச்சு
அடிக்கும் ஆட்டம் ஆதிவாசி போல இருக்கட்டும்

அட வீதி பாத்தாதே
இந்த ஊரு பாத்தாதே
நம்ம எறங்கி கலக்கத்தான்
இந்த உலகம் போதாதே

கோலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே

மச்சி கடலு மீனுக்கு
குடத்தில் தண்ணி பத்தாதே
சின்ன பசங்க மனசுக்கு
வெறும் கனவு பத்தாதே
இந்த lifea நீயும்
அனுபவிக்க வயசுபத்தாதே
(அட வீதி)

கோலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே

தடக்கு தடக்கு ரயில போல
வருஷம் ஓரம்டா நீ
படுத்து படுத்து எழுந்து பாரு
நிமிசம் ஓடும்டா

தடக்கு தடக்கு
தடக்கு தடக்கு
தடக்கு தடக்கு

எடக்கு மோடக்கு இல்லயினா இளமை எதுகுடா
நீ குருக்க நெடுக்க மடக்கலனா ஓடம்பு எதுகுடா
படிக்கிர பாடம் போதாதுடா
நெருப்புல எரங்கி படிடா
கனவில எதயும் ஓட்டாதடா
ஜெயிக்கம் எடத்த புடிடா
நம்ம தெசயில பாத்து
சுத்தி அடிக்குது காத்து
ஹேய் உளுக்கி உளுக்கி முறுக்கி முறுக்கி
மேளம் அடிங்க
(அட வீதி...)

காலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நா பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே
(காலேஜ்)

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா-நீ தானே என் பொன்வசந்தம்


படம்: நீ தானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யுவன்சங்கர்ராஜா
வரிகள்: நா.முத்துக்குமார்
 
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா
பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் துங்கிடும் பனி துளி
காலை வெயில் வந்தாலே
ஓடி போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..
கண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..

என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில்
தாவுதடி கூத்தாடி

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா

இதற்குத்தான ஆசை வைத்தாய்
இதயம் கேட்குதே.....
இவளுக்குகாக துடிக்க வேண்டாம்
என்று வெறுக்குதே.....
மதி கெட்ட என்னிடம்
மனம் நொந்து சொன்னது
மரணத்தை போல் இந்த
பெண் இவள் என்றது
தீயை போன்ற பெண் இவள்
என்று தெரிந்து கொண்டதே என் மனம்
அன்பு செய்த ஆயுதங்கள்
பெண்ணிடத்தில் உண்டு ஏராளம்

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா

பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் துங்கிடும் பனி துளி
காலை வெயில் வந்தாலே
ஓடி போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..
கண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..

என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில்
தாவுதடி கூத்தாடி

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக-நீ தானே என் பொன்வசந்தம்


படம்: நீ தானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ரம்யா  
வரிகள்: நா.முத்துக்குமார்
 
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாய ? ஒ.. ஹோ..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா ?
தேங்கி போன ஒரு நதீன இன்று நானடா ..!!
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே
தனந்தனி காட்டில் இன்பம் காண வாடா ..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

சேர்த்து போன நம் சாலைகள் மீண்டும் தோணுமா ?
சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா ?
ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா ?
காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா ?
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா ?
தொட்டோ தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாய ? ஒ.. ஹோ..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது-நீ தானே என் பொன்வசந்தம்


படம்: நீ தானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யுவன்சங்கர்ராஜா,ரம்யா  
வரிகள்: நா.முத்துக்குமார்
 
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
விழியோடு, விழி பேச..
விரலோடு, விரல் பேச , அடடா வேறு என்ன பேச..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே..
ஹே ஹே ஹே..

என் தாயை போல ஒரு பெண்ணை தேடி
உன்னை கண்டு கொண்டேன்..
ஒ.. என் தந்தை தோழன், ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்..
அழகான உன் கூந்தல் மாகோலம்..
அதை கேட்கும் எந்தன் வாசல்..
காலம் வந்து வந்து கோலமிடும்..
உன் கண்ணை பார்த்தாலே.. முன் ஜென்மம் போவேனே..
அங்கே நீயும் நானும் நாம்..

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே

கை வீசி காற்றில், நீ பேசும் அழகில், மெய்யாகும் பொய்யும்..
என் மார்பில் வீசும், உன் கூந்தல் வாசம், ஏதோ செய்யும்..
என் வீட்டில் வரும் உன் பாதம்.. எந்நாளும் இது போதும்..
இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்..
ஆள் யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்,
அன்பால் உன்னை நானும் கொள்வேன்..

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
விழியோடு, விழி பேச..
விரலோடு, விரல் பேச , அடடா வேறு என்ன பேச..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே..
ஹே ஹே ஹே..

முதல் முறை பார்த்த ஞாபகம்-நீ தானே என் பொன்வசந்தம்


படம்: நீ தானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சுனிதி சௌகான்
வரிகள்: நா.முத்துக்குமார்
 
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா மழையா வழிய சுகமா என நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்

முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மையை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்

நீந்தி வரும் நிலவினிலே
ஓர் ஆயிரம் ஞாபகங்கள்
நீங்கநெடும் கனாவிநிலே
நூறாயிரம் தீ  அலைகள்
நெஞ்சமெனும் வினாக்களுக்குள்
என் பதில் என்ன பல வரிகள்
சேரும் இடம் விலாசதிலே உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள்
அங்கு போனது உன் தடம் இல்லையே
காதல் என்றல் வெறும் காயங்களா ?
அது காதலுக்கு அடையாளங்களா ??

வெயிலா மழையா வழிய சுகமா என நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்

முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா மழையா வழிய சுகமா என நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்-நீ தானே என் பொன்வசந்தம்


படம்: நீ தானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கார்த்திக்
வரிகள்: நா.முத்துக்குமார்
 
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

நீ என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்

கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்கி
நீ சாய்வதும் என்னை கொஞ்சம் பார்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவதை போல்
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கதானடி
இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும்
தீயாக பார்காதடி....
சின்ன பிள்ளை போல நீ அடம்பிடிப்பதென்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணி சொல்ல
கேட்டு கொண்டால் கழுகும் பயந்து நடுங்கும்

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்

காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
சின்ன சின்ன தலைகணமே
காதல் அதை பொறுக்கண்ணுமே இல்லையெனில்
கட்டி வைத்து உதைகணுமே
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டும்மடி
மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்-நீ தானே என் பொன்வசந்தம்


படம்: நீ தானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கார்த்திக்
வரிகள்: நா.முத்துக்குமார்
 
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.

சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..

நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம்.
நெஞ்சில் பார்த்து பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்.
தள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும் ஒரு ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி..
தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் என்றும் தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி…
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா.
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்.. ஹே ஹே ஹே…

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,

கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..

நேற்று எந்தன் கன்வில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே…
காலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே..
பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில் எந்ந மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள் தொட்டு எண்ணம் ஓடும் தறிகெட்டு..
இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி
என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே..
மீட்டதோது மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்…

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.

சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..

Thursday, September 27, 2012

தன்னை தானே செதுக்கியவன் இவன்-பில்லா II


படம்: பில்லா II
இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியவர்கள்: யுவன்சங்கர்ராஜா,ஸ்டெப்நி
வரிகள்: நா.முத்துக்குமார்
 
Gang gang gangster here comes the monster
Gang gang gangster you will surrender

தன்னை தானே செதுக்கியவன் இவன்
விதி இருட்டினில் கிறுக்கியவன் இவன்
வாழ்வில் எல்லாம் ஒதுக்கியவன் இவன்
வலியில் இன்பம் தேடியவன்

Don don don, மிரளும் don don
don-கு கெல்லாம் don, இந்த பில்லா தான்
Don don don..அதிரும் don don
சிங்கத்தின் வெறி இந்த பில்லா தான்

Give your way, your way to this gangster
Give your way..your way to this monster
Give your way, your way to this gangster

எரிமலை மேலேறி கொடி கட்டுவான்
இவன் எழுந்ததும் எல்லோரும் கை தட்டுவான்
என்கேகெங்கோ முகம் காட்டுவான்
இவன் எமனுக்கே தெரியாமல் பயம் காட்டுவான்

Don don don, மிரளும் don don
don-கு கெல்லாம் don, இந்த பில்லா தான்
Don don don..அதிரும் don don
சிங்கத்தின் வெறி இந்த பில்லா தான்

Gang gang gangster here comes the monster
Gang gang gangster here comes the monster
Gang gang gangster here comes the monster
Gang gang gangster you will surrender

டேவிட் பில்லா பில்லா பில்லா
here டேவிட் பில்லா is the monster
drop drop drop drop the beat..

Don don don..Fear so strong
if you stand in his way
you will not live for long
Don don don..his power so strong
So of his game..he is never wrong

Gang gang gangster here comes the monster
Gang gang gangster here comes the monster
Gang gang gangster here comes the monster
Gang gang gangster you will surrender

உனக்குள்ளே மிருகம்-பில்லா II


படம்: பில்லா II
இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியவர்கள்: ரஞ்சித்
வரிகள்: நா.முத்துக்குமார்
 
உனக்குள்ளே மிருகம்
தூங்கிவிட நினைக்கும்
எழுந்து அது நடந்தால்
ஏரிமலைகள் வெடிக்கும்

கனவுகளை உணவா
கேடு அது துடிக்கும்
உன்னை அது விழுங்கி
உந்தன் கையில் கொடுக்ம்

ஏரிக்காமல் தேன் அடை கிடைக்காது
உதைகாமல் பந்து அது எழும்பாது
வலி அதுதான் உயிர் பிழைக்கும்
இது வரை இயற்கையின் விதி இதுதான்

நரகமதில் நீயும் வாழ்ந்தால்
மிருகமென மாற வேண்டும்
பலி கொடுத்து பயமுறுத்து
வெட்ட வெட்ட தலை நிமிர்த்து

உலகமது உருண்டை இல்லை
நிழல் உலகில் வடிவம் இல்லை
இலக்கணத்தை நீ உடைத்து
தட்டி தட்டி அதை நிமிர்த்து

இங்கு நண்பன் யாரும் இல்லையே
எதிர்க்கும் பகைவன் யாரும் இல்லையே
என்றும் நீதான் உனக்கு நண்பனே
என்றும் நீதான் உனக்கு பகைவனே

வலி அதுதான் உயிர் பிழைக்கும்
இது வரை இயற்கையின் விதி இதுதான்

முதல் அடியில் நடுங்க வேண்டும்
மறு அடியில் அடங்க வேண்டும்
மீண்டு வந்தால் மீண்டும் அடி
மறுபடி மரண அடி

அடிக்கடி நீ இறக்க வேண்டும்
மறுபடியும் பிறக்க வேண்டும்
உறகதிலும் விழித்திரு நீ
இரு விழியும் திறந்த படி

நீதான் உன்னக்கு தொல்லையே
என்றும் நீதான் உனக்கு எல்லையே
நீ தொட்டாய் கிளிகுமுல்லையே
வழிகள் இருந்தும் வலிக்க வில்லையே

வலி அதுதான் உயிர் பிழைக்கும்
இது வரை இயற்கையின் விதி இதுதான்

ஏதோ ஏதோ ஒரு மயக்கம்-பில்லா II



படம்: பில்லா II
இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியவர்கள்: யுவன்சங்கர்ராஜா,தன்வி ஷா,சுவி சுரேஷ்
வரிகள்: நா.முத்துக்குமார்

 
ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
எங்கோ காற்றில் நிறைந்திருக்கும்
உள்ளே உள்ளே உன்னை எழுப்பும்
உள்ளே வந்தால் நெஞ்சு வலுக்கும்
இந்த உலகம் புது உலகம்
கண் திறந்தும் கனவுலகம்

I like the way you move
you like the way i move
why dont we dance together all night long..

நீ தேடும் ஆண் மகன்
உன் தொட தேன் மகன்
உன் முனி சுட சுட அணைத்திட வா
Bounce Bounce Bounce with me
Bounce Bounce Bounce with me

கண்ணோடு பார்ப்பது நேரில் காணும் போயாட
கண்ணீரை பார்த்திடு மெய்யாகும் பொய்யே
என்னென வேண்டுமோ இங்கே வந்து உயிட
எந்தன் உள்ளம் கொய்தா பையா

விழிகளில் ஒரு போதை ..இருந்தாலே
நீ இன்றை இன்றை வெல்லலாம்
வென்றாலே தான்னாலே இந்த உலகம் பின்னாலே

உன் வாழ்கை உடைந்த வாழ்கை
கண்ணோடு சேர்த்து வைகை
போவோம் வா வா புது உலகம் காண்போம்.

I'm gonna get me to the ..
we gonna move together
coz I wanna say na na na yeyo yeoh..
come close to me poppy yeyo yeoh.
Na na na yeyo yeoh..
dance with me na na na yeyo yeoh

Girl,
Bounce Bounce Bounce with me
Bounce Bounce Bounce with me

மதுர பொண்ணு எதிரே நின்னு- பில்லா II


படம்: பில்லா II
இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியவர்கள்: ஆன்ட்ரியா
வரிகள்: நா.முத்துக்குமார்
 
மதுர பொண்ணு, எதிரே நின்னு
என்னை கட்டி புடிச்சு பாரு
மல்லிக பூ மரிகொழுந்து
என்ன தொட்டு கடிச்சு பாரு

என் தாவணி வந்தது பின்னால்
என் தாகம் வந்தது முன்னாள்
தேவதை வந்தது உன்னால்
கொண்டாடும் வயசு

யே ஊசி குதுர கண்ணால்
பல ஊரே வந்தது பினால்
உள்ளம் கேட்டது உன்னால்
தள்ளாடும் மனசு

சந்தோச தேரில் வா வந்து ஏரிகோடா
சந்தேகம் இருந்தா வா வந்து கட்டிகோடா
என் தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாட

உன் காதல் அது இங்கே செல்லாதடா
அட உன் காசு அது மட்டும் செல்லும் அடா

புதிர் போர் இந்த இடம் தாண்டா
இங்கு நீ வந்து தொட்ட்ரளும் வெற்றி யாத
எல்லோருமே ஒன்று என்னும் மன்றம் இது oh ...

சந்தோச தேரில் வா வந்து ஏரிகோடா
சந்தேகம் இருந்தா வா வந்து கட்டிகோடா
என் தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா

இதயம் இந்த இதயம்-பில்லா II


படம்: பில்லா II
இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியவர்கள்: ஷ்வேதாபண்டிட்
வரிகள்: நா.முத்துக்குமார்

இதயம் இந்த இதயம்
இன்னும் எதனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ

ஆசை தூண்டிலில் மாறிக்கொண்டு
இது தத்தளித்து துடிக்கிறதே
காயம் யாவையும் தேற்றி கொண்டு
இது மறுபடியும் நினைகிறதே

உள்ளுக்குளே துடிக்கும் சிறு இதயம்
எத்தனையோ கடலை இது விழுங்கும்

வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே
வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே
வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்
வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே

இது தவித்திடும் நெருப்பா
இல்லை குளிர்ந்திடும் நீரா
இது பனி ஏறி மழையா
இதை அறிந்தோர் யாருமில்லை
உள்ளத்திலே அறை உண்டு வாசல் இல்லை
உள்ளே வந்தேன் உன் நினைவோ திரும்பவில்லை

தூங்கும் போதும் இது துடிதிடுமே
ஏங்கும் போதோ இது வெடிக்கும்
தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும்
வேண்டும் என்றே இது நடிக்கும்

இது கடவுளின் பிழையா
இல்லை படைத்தவன் கொடையா
கேள்வி இல்லா விடையா
இதை அறிந்தோர் யாருமில்லை
இதயம் எல்லை என்றல் என்ன நடக்கும்
கண்ணீர் எண்ணம் வார்த்தையை மாறி இழக்கும்

இதயம் இந்த இதயம்
இன்னும் எதனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ

மாயாவி மாயாவி-முகமூடி


படம்: முகமூடி
இசை: கிருஸ்ணகுமார்
பாடியவர்கள்: சின்மயி
வரிகள்: மதன் கார்க்கி

மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தேதான் திரிவான்
தலை தொடும் அலையென எழுந்திடுவான் - நெஞ்சில்
அணைத்திடும் மழையென நனைத்திடுவான்!

பயம் மூளும் நேரம் தரை வந்து காப்பான்
துயர் கொண்ட பேரை கரை கொண்டு சேர்ப்பான்
கடமை முடிந்தால் பறந்திடுவான் - பாவி
இவளின் துயரம் மறந்திடுவான்
அவனோடிவள் இதயம் தொலையும்! - தனிமைத் தெருவில்
இவளோடவன் நிழலும் அலையும்!

எழுநூறு கோடி முகம் இங்கு உண்டு
அழகான ஒன்றை எவர் கண்டதுண்டு?
மனதோர் உருவம் வரைகிறதே - காற்றில்
கனவாய் அதுவும் கரைகிறதே
கொடுமை அதில் கொடுமை எதுவோ? - விழிகள் இருந்தும்
உனை காணவே முடியாததுவோ?

வாய மூடி சும்மா இருடா-முகமூடி


படம்: முகமூடி
இசை: கிருஸ்ணகுமார்
பாடியவர்கள்: ஆழப் ராஜு
வரிகள்: மதன் கார்க்கி

வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!

கடிகாரம் தலைகீழாய் ஓடும் - இவன்
வரலாறு எதுவென்று தேடும்!
அடிவானில் பணியாது போகும் - இவன்
கடிவாளம் அணியாத மேகம்!

பல நிலவொளிகளில்
தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில்
கனவுகள் இல்லை ஏதும்.

காணாமலே
போனானடா!
ஏனென்று கேட்காதே போடா !

பார்வை ஒன்றில் காதல் கொண்டா,
எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்?
பேரே இல்லா பூவைக் கண்டா,
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்?

என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ?

நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ?

ஓயாமலே
பெய்கின்றதே
என் வானில்
ஏனிந்தக் காதல்?

நாளை என் காலைக்
கீற்றே நீ தானே!
கையில் தேநீரும் நீ தானடி!

வாசல் பூவோடு
பேசும் நம் பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீ தானடி!

கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ?

கண் மூடிடும்
அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!

Sunday, September 23, 2012

ஹேய் பேபி பேபி மூன்றே மூன்று வார்த்தை-ஏகன்


படம்: ஏகன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

ஹேய் பேபி பேபி மூன்றே மூன்று வார்த்தை
ஒரு வாட்டி சொல்வாயா?
மூன்று முழுசாக சொல்ல கூட வேண்டாம்
ஒரு வாட்டி சொல்..

ஹேய் லவ்லி லவ்லி
ஒரே ஒரு பார்வை
ஒரு தடவை பார்ப்பாயா?
ரொம்ப பெருசாக பார்க்கக் கூட வேண்டாம்
சின்ன சின்னதாய் பார்

கல்லூரி பாடம் செல்லும் நெஞ்சில்தான்
நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன
உன் நெஞ்சம் அறியும் அறியும்

மல்லிகா ஐ லவ் யூ
மல்லிகா ஐ லவ் யூ
ஓஹோ மல்லிகா ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ
மல்லிகா மல்லிகா ஓஹோ மல்லிகா
ஓ மல்லிகா சொல் சொல்
(ஹேய் பேபி..)

ஓ ஏகாந்த மேகம் என்னை கேட்டதே
அசைகின்ற மின்னல் அவள் எங்கே என்றுதான்
நடை பாதை பூக்கள் என்னை கேட்டதே போ
மலர்வாச தேசம் அவள் எங்கே என்றுதான்
மலையோர நானும் சென்றால் அவள் எங்கே என்றே கேட்கும்
இவை யாவும் கேட்கும் போது நான் கேட்க கூடாதா

மல்லிகா ஐ லவ் யூ
ஹேய் மல்லிகா ஐ லவ் யூ
ஓஹோ மல்லிகா ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ

உன்னை தொட்டு பார்த்த அந்த நேரமே
பட்டாம்பூச்சி கூட்டம் பூகக்லாக மாறுதே
உன்னை கண்ட காற்ற்று அந்த மோகத்தில்
வெயில் கால நதியாஇ வெப்பமாக மாறுதே
உனகான சாலை எல்லாம்
பனி தேசம் போல மாறும்
இவை யாவும் மாறும் போது
நான் மாற கூடாதா

கல்லூரி பாடம் சொல்லும் நெஞ்சில்தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன
உன் நெஞ்சம் அறியும் அறியும்

மல்லிகா ஐ லவ் யூ
ஹேய் மல்லிகா ஐ லவ் யூ
ஓஹோ மல்லிகா ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ

மல்லிகா ஐ லவ் யூ
ஹேய் மல்லிகா ஐ லவ் யூ
ஓஹோ மல்லிகா ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ

நான் எல்லாருக்கும் ஃபிரண்டு-ஏகன்


படம்: ஏகன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ப்ளேஸ், நரேஷ் ஐயர், அஸ்லம்

நான் எல்லாருக்கும் ஃபிரண்டு
இப்போ மாறிப்போச்சு ட்ரெண்டு
இந்த பூமி நம்ம க்ரவுண்டு
வா அடிப்போம் ஸ்கைய ரவுண்டு

இது ஜாலியான சீசன்
இங்கு நித்தம் ஒரு ஃபேஷன்
இது லைஃபில் ஒரு போர்ஷன்
இங்கு எதுக்கும் இல்லை ரீசன்
ஒன் மோர் கேட்டா கூட கிடைக்காது இந்த லைஃப்
ஒன் வேயில் போகும்போது ப்ரேக் எதற்கு
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா

எதுவரை எங்கள் எல்லையென்று
யாரும் இங்கே சொல்ல முடியாதே
இதுவரை இங்கு நடந்ததெல்லாம்
மறந்து போச்சு கணக்கில் கிடையாதே
கனவினை எல்லாம் சேமித்து வைக்க
வங்கிகள் கிடையாதே
எங்கள் கனாக்களை எல்லாம் ஒன்றாய்
இணைத்தால் வானம் தெரியாதே
எல்லாமே எல்லாமே புதுசாச்சு புதுசாச்சு
மாற்றங்கள் வந்தாச்சு
நேற்று நாளை எல்லாம் மறந்தாச்சு
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா

அட கனவுக்கில்லை எல்லை
இங்கு கட்டுப்பாடு இல்லை
இது அண்ணனோட கூட்டம்
நாங்க போட போறோம் ஆட்டம்
தல கவுண்டவுன் இப்போ ஸ்டார்ட்டு
நீ போடு செம்ம பீட்டு
இது புது புது ரூட்டு
தல எப்போதுமே வெயிட்டு
டார்கேட்டு வைக்க மாட்டோம்
பட்ஜெட்டு போடா மாட்டோம்
அதுக்காக தானே நாங்க
ஃப்ரீடம் கேட்டோம்
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா

உன் பேரே தெரியாதே உன்னை கூப்பிட முடியாதே-எங்கேயும் எப்போதும்


படம்: எங்கேயும் எப்போதும்
இசை: சத்யா
பாடியவர்கள்: மதுஸ்ரீ
பாடல்: நா.முத்துக்குமார்

உன் பேரே தெரியாதே.. உன்னை கூப்பிட முடியாதே..
நான் உனக்கோர் பேர் வைத்தேன்.. உனக்கே தெரியாது..
அந்த பேரை அறியாது.. அட யாரும் இங்கேது..
அதை ஒருமுறை சொன்னாலே.. தூக்கம் வாராது..
அட தினம்தோறும் அதை சொல்லலி உன்னை கொஞ்சுவேன்..
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்..

சூடான பேரும் அதுதான்.. சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்..
சூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே..
ஜில்லென்ற பேரும் அதுதான்.. கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்..
நதியென்று நீயும் நினைத்தால் அது இல்லையே..
சிலிர்க்கவைக்கும் தெய்வமில்லை,
மிளரவைக்கும் மிருகம்மில்லை..
ஒளிவட்டம் தெரிந்தாலும் அது பட்டப்பேரில்லை..
என் பேரின் பினால் வரும் பேர் நான் சொல்லவா..?

பெரிதான பேரும் அதுதான்.. சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்..
எத்தனை எழுத்துக்கள் என்றால் விடையில்லையே..
சிறிதான பேரும் அதுதான்..
சட்டென்று முடிந்ததே போகும், எப்படி சொல்வேன் நானும்,
மொழி இல்லையே..
சொல்லிவிட்டால் உடைத்து ஓட்டும்..
எழுதிவிட்டால் தேனும் சொட்டும், அது சுத்த தமிழ் பெயர்தான்..
அயல் வார்த்தை அதில் இல்லை..
என் பேரின் பினால் வரும் பேர் நான் சொல்லவா..?

உன் பேரே தெரியாதே.. உன்னை கூப்பிட முடியாதே..
நான் உனக்கோர் பேர் வைத்தேன்.. உனக்கே தெரியாது..
அட தினம்தோறும் அதை சொல்லலி உன்னை கொஞ்சுவேன்..
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்..

மாசமா ஆறு மாசமா ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு- எங்கேயும் எப்போதும்


படம்: எங்கேயும் எப்போதும்
இசை: சத்யா
பாடியவர்கள்: சத்யா
பாடல்: நா.முத்துக்குமார்

மாசமா.. ஆறு மாசமா.. ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு..
வாரமா சில பல வாரமா.. காதுக்கிடன்தேனே பூவிழிக்கு..
கண்ணுறங்கள.. செவி மடுக்கல..
பசி எடுக்கல.. வாய் சிரிக்கல..
கை கொடுக்கல.. கால் நடக்கல..
அந்த வெறுப்புல ஒன்னும் புரியல..
ஏ மாசமா.. மாசமா.. ஏங்கித்தவிச்சேன்..
மாசமா.. ஆறு மாசமா.. ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு..

ரோட்டுல பாக்கல.. பார்க்குல பாக்கல..
பஸ்சுல பாக்கல.. ஆட்டோல பாக்கல..
தியேட்டர்ல பாக்கல.. ஸ்ட்ரீட்டுல பாக்கல..
பாத்து எல்லாம் தொலவுல..
காட்டுல நிக்கல.. மேட்டுல நிக்கல..
அங்கயும் நிக்கல.. இங்கேயும் நிக்கல..
எங்கேயும் நிக்கல நிக்கல நிக்கல
நின்னது அவளோட மனசுல..
நின்நாளோ பாத்தாளோ தெருவுல..
நா பாக்காம போனேனே முதலுல..
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு..

மாசமா.. ஆறு மாசமா.. காதுக்கிடன்தேனே பூவிழிக்கு..

நம்பரும் வாங்கல.. போனும் பன்னால..
அட்ரஸ் வாங்கல.. லெட்டரும் கொடுக்கல..
போலோ பண்ணல தூது அனுப்பல..
எப்படி வந்தா நேரில..
கிண்டலும் பண்ணல.. சண்டையும் போடல..
மொறச்சு பாக்கல.. சிரிச்சு பேசல..
வழி மறிக்கல.. கையப்பிடிகல..
எப்படி விழுந்தா காதல்ல..
அவ மூச்சாகி போனாளே உயிருல..
என்னக்கு மேட்ச் ஆகி விட்டாளே லைபுல..
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு..

மாசமா.. ஆறு மாசமா.. மோசமா மோசமா காதலிச்சேன்..
நா காதலிச்சேன்..
கண்ணுறங்கள.. செவி மடுக்கல..
பசி எடுக்கல.. வாய் சிரிக்கல..
மோசமா மோசமா காதலிச்சேன்..

கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப் பொண்ணு-எங்கேயும் எப்போதும்

படம்: எங்கேயும் எப்போதும்
இசை: சத்யா
பாடியவர்கள்: விஜய்பிரகாஷ்,ரனினா,போனி
பாடல்: தாமரை

கோவிந்தா கோவிந்தா.. சென்னையில புதுப் பொண்ணு..
சிரிக்கிறா.. மொறைக்கிறா.. ஆயிரத்தில் இவ ஒன்னு..
எதுக்கு வந்தாலோ இம்ச தந்தாலோ..
கோவிந்தா கோவிந்தா.. சென்னையில புதுப் பொண்ணு..
சிரிக்கிறா.. மொறக்கிறா.. ஆயிரத்தில் இவ ஒன்னு..
டாடி மம்மி என்ன பேறு இவளுக்கு வச்சாங்க..
அட என்ன கேட்டா கொடச்சலுன்னு பேர வப்பேங்க..

கொஞ்சம் கூட நம்பிக்க இல்ல.. கூட வந்து ஓட்டிகிட்ட தொல்ல..
கழட்டி விடவும் மனசே இல்ல.. என்ன கொடுமையடா..
காஞ்சு போன மொளகா உள்ள, கொட்டிக் கிடக்கும் விதையப்போல..
காரமாக வெடிச்சா உள்ள பாவ நெலமையடா..
ஆகாயம் மேலேதான் அழகான மேகங்கள்..
அண்ணாந்து பார்க்க நேரமின்றி போவது எங்கேயோ..
வெயிலோடு மழையும்தான் ஒன்று சேர்ந்து வந்ததுபோல்..
இந்த கொஞ்ச நேரப் பயணம் சென்று முடிவது எங்கேயோ..

அடடா டாடி மம்மி என்ன பேறு இவனுக்கு வெச்சாங்க..
என்ன என்ன என்ன கேட்டா சுமதாங்கினு பேறு வப்பேங்க..

கப்பல் வாங்க வந்திருப்பாளோ.. செப்பல் வாங்க வந்திருப்பாளோ..
உசுர வாங்க வந்திருப்பாளோ.. ஒன்னும் புரியலயே..
ட்ரைலர் போல முடிந்திடுவாலோ.. ட்ரைன போல நீண்டிடுவாலோ..
எப்ப இவன இவ விடுவாளோ.. ஒன்னும் தெரியலயே..
அப்பாவி போலத்தான் தப்பாக நெனச்சானே..
ஐநூறு கேள்வி கேட்டு கேடு ஆளக் கொல்றாலே..
இவ இவ வந்தபோது வந்த கோபம் இப்போ இல்லையடா..
இவள் சேர்த்து வைத்த சந்தேகங்கள்..

கோவிந்தா..
கோவிந்தா கோவிந்தா.. சென்னையில புதுப் பொண்ணு..
சிரிக்கிறா.. மொறைக்கிறா.. ஆயிரத்தில் இவ ஒன்னு..

யாரோ யாரோ நான் யாரோ-மாற்றான்


படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக்,ப்ரியாஹிமேஷ்
பாடல்: தாமரை

யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

காற்றே காற்றே சொல்வாயோ !
காலம் தாண்டி செல்வாயோ !
கண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ ?

இது கனவா கனவா ?
இல்லை நெனவா நெனவா ?
இது கணவாய் இருந்தால் கலைதே போகும் போகட்டும்

இது நிழலா நிழலா ?
இல்லை ஒளியா ஒளியா ?
இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்

ஹோ ..யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

முதல் முறை இங்கு நீ இன்றி
நடக்கிறேன் தனியாக
இறந்தும் உன் மூச்சு காற்றை
உணர்கிறேன் இதமாக

சரிபாதியில் இரவும் பகலும்
என்கூறியே உலகம் சுழலும்
ஒரு பாதியே பிரிந்தே போனால் என்னாகும் ?

நினைவால் இனி நான் வாழ
நதி போல் இனி நாள் போக
எதனால் இனி ஆறும் ஆறும் என் காயம்

யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

கனாக்களில் வரும் பெண் பின்பம்
திகைக்கிறேன் யார் என்று
முகத்திரை அதை தள்ளி பார்த்தால்
முறைக்கிறாய் நீ நின்று

கனகாம்பர இதழை விரித்து
குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து
திரும்பாமலே நடந்தால் சென்றால் எது மிஞ்சும்

நிறமாலையை போல் நெஞ்சம்
நெளிந்தாடிடும் பல வண்ணம்
உன்னை பார்த்ததும் பாராதது போல்
சிறு வஞ்சம்
உன்னை பார்த்ததும் பாராதது போல்
சிறு வஞ்சம்

யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

காற்றே காற்றே சொல்வாயோ !
காலம் தாண்டி செல்வாயோ !
கண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ ?

இது கனவா கனவா ?
இல்லை நெனவா நெனவா ?
இது கணவாய் இருந்தால் கலைதே போகும் போகட்டும்

இது நிழலா நிழலா ?
இல்லை ஒளியா ஒளியா ?
இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்

இது மாலை மயங்கும் வேலையா-மாற்றான்


படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: பிராங்கோ,சத்யன்,ஆலாப்ராஜு,சாருலதாமணி,சுசிச்ரா    
பாடல்: பா.விஜய்

இது மாலை மயங்கும் வேலையா
நீ வா வா கைகூட
இரு விழிகள் ஆடும் வேட்டையா
நீ வா வா மெய் சேர

கண்ணோடு உதடு பேசுமா ?
கையோடு இளமை சேருமா ?
கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா ?
கன நேரம் உள்ளம் தூங்குமா ?

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரம்மில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு

செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

அழகான வார்த்தை நீ என்றால்
முற்று புள்ளி வெட்கம்
மெதுவாக உன்னை வர்ணித்தால்
மொழியே சொர்கி நிற்கும்

அணு சிதைவில்லாமல் பெண்ணில் மின்சாரம்
இருவரி கவிதைகள் மின்னும் இதழாகும்

அட மேல் உதட்டை கீழ் உதட்டை
ஈரம் செய்யும் நேரம்
உயிர் மேலிருந்து கீழ் இறங்கி
என்னென்னவோ ஆகும்
இது தீண்டளுக்கும் தூண்டலுக்கும்
இடையில் உள்ள மோகம்
முத்த தேனில் மூழ்க முன்நேரம்

தீயே தீயே ..
தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர செர்ந்தியே

this is how we like to do it
this is how we like to do it

உறையாமல் செய்த அங்கங்கள்
நெஞ்சை முட்டி கொள்ளும்
குறையாமல் செய்த பாகங்கள்
கொஞ்சி குலவ சொல்லும்

அசைகின்ற சொத்துக்கள் உன்னில் ஏராளம்
அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்

ஒரு கால் முளைத்த வானவில்லை
சாலையோரம் கண்டேன்
நடமாடும் அந்த பூவனத்தில்
சாரல் வீச கண்டேன்
பனி தூவலாக புன்னைகைக்கும்
பறவை ஒன்றை கண்டேன்
தீயும் தேனும் சேருமே கண்டேன்

தீயே தீயே ராதியே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர செர்ந்தியே

அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரமில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு

செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீர தீர சேர்ந்தியே ..

நாணி கோணி ராணி உந்தன்-மாற்றான்


படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: விஜய்பிரகாஷ்,கார்த்திக்,ஷ்ரேயா கோஷல்
பாடல்: விவேகா

நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத காரி உன்னை
தா நே என்று கேட்கிறேன்

நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தால் போகிறேன்
ஏவல் ஏழாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்

நீரை நீரை நீ மேகம் தாண்டி வரை
தரை தரை என் தாகம் தூண்டி நூறாய்
பாறை பாறை நன் உன்னால் ஆனேன் தேவை
கோயம் கண்கள் மேயும் பேசுமா

நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத காரி உன்னை
தா நே என்று கேட்கிறேன்

நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தால் போகிறேன்
ஏவல் ஏழாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்

நீரை நீரை நீ மேகம் தாண்டி வரை
தரை தரை என் தாகம் தூண்டி நூறாய்
பாறை பாறை நன் உன்னால் ஆனேன் தேவை
கோயம் கண்கள் மேயும் பேசுமா

ஒரு காலை நேரம் நீ வந்தாலே
பனி வீசும் காற்றுக்கு
பணியாமல் தேகம் சூடேறும்

கண் பேசும் மௌனமே ஒன்றாக
நாம் போகும் சாலைகள்
முடியாமல் எங்கெங்கோ நீளும் நீளும்

நதியிலே இல்லை போல பயணம்
இனிப்பான தருணம்
மனதோடு மாய மின்சாரம்

எதிரே நனையாமல் கரைந்தேன்
நகராமல் உறைந்தேன்
மெதுவாக மெதுவாக உணதாகிறேன்
உயிரே உயிரே உயிர் போக போக தோடு

நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத காரி உன்னை
தா நே என்று கேட்கிறேன்

நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தால் போகிறேன்
ஏவல் ஏழாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்

கால் முளைத்த பூவே-மாற்றான்


படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்:ஜாவிட் அலி,மஹாலக்ஷ்மி ஐயர்
பாடல்: மதன் கார்க்கி

கால் முளைத்த பூவே
என்னோடு பலே ஆட வா வா!
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா!

கேமமில் பூவின் வாசம் அதை - உன்
இதழ்களில் கண்டேனே!
சோவியத் ஓவியக் கவிதைகளை - உன்
விழிகளின் விளிம்பினில் கண்டேன்!

அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.

நிலவுகள் தலைகள் குனிந்ததே
மலர்களின் மமதை அழிந்ததே
கடவுளின் கடமை முடிந்ததே
அழகி நீ பிறந்த நொடியிலே!

தலைகள் குனிந்ததோ?
மமதை அழிந்ததோ?
கடமை முடிந்ததோ?
பிறந்த நொடியிலே!

ஹே பெண்ணே...உன் வளைவுகளில்
தொலைவதுபோலே உணருகிறேன்
இடையினிலே திணறுகிறேன்
கனவிதுதானா… வினவுகிறேன்.

அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.

இரவெலாம் நிலவு எரிகையில்
திரிகளாய் விரல்கள் திரியுதே!
அருகிலே நெருங்கி வருகையில்
இளகியே ஒழுக்கம் உருகுதே!

நிலவு எரிகையில்
விரல்கள் திரியுதோ?
நெருங்கி வருகையில்
ஒழுக்கம் உருகுதோ?

எனை ஏனோ... உருக்குகிறாய்
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
இடைவெளியை சுருக்குகிறாய்
இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்!

அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம் ம்ம்
இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம் ம்ம்
உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம்
எரியும் வெறியை தெறித்தாய்

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்-மாற்றான்


படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்:க்ரிஷ்,பாலாஜி,மிலி,ஷர்மிளா
பாடல்: நா.முத்துக்குமார்

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

திரே திரே திரே திரே
திரே திரே திரே

வண்ணம் வேறு வானம் வேறு
இருவரின் காதல் வேறு
புயல் அடித்தும் வாழுதே
இருபறவை ஒரு கூட்டில்
மெது மெதுவாய் பூக்கட்டும்
இந்த பூக்கள் எதிர்காற்றில்

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

கருவாச்சு உடல் உருவாச்சு
அது தவறாச்சு இரு உயிராச்சு
இரண்டும் வளர்ந்தாச்சு
எனக்காச்சு எது உனக்காச்சு
இனி புவி எல்லாம் அட புதுகாட்சி
வருடம் உருண்டசு
இவன் ஒரு பக்கம் அவள் மறு பக்கம்
இது எதுவோ ? அட பூவும் தலையும்
சேர்ந்த பக்கம் பொதுவோ

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

இவள் வார்த்தை மழை துளியாக
அவள் மறு வார்த்தை சர வெடியாக
இணைந்தும் தனியாக
நதிபோலே இவன் மனம்போக
பெரும் புயல் போலே அவன் செயல் போக
யார் இங்கே இணையாக ..
இவள் கண்ணாடி அவன் முன்னாடி
தரும் உருவம்
இது பிரிந்தால் கூட
ஒன்றாய் நின்ற்கும் உருவம்

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

திரே திரே திரே திரே
திரே திரே திரே

ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது-நான் அடிமை இல்லை


படம் : நான் அடிமை இல்லை 
இசை : விஜய் ஆனந்த்
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஜானகி

ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
ஒரு ஜீவன் தான்..........

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்
வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி
உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை
மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்
ஒரு ஜீவன் தான்..........

காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையோ
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ
வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்
வளையோசைதான் நல்ல மணிமந்திரம்
நாந்தானைய்யா நீலாம்பரி
தாலாட்டவா நடுராத்திரி
சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம்
ஒரு ஜீவன் தான்..........




தென்மதுரை வைகை நதி-தர்மத்தி்ன் தலைவன்


படம் : தர்மத்தி்ன் தலைவன்
இசை : இளையராஜா
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா, மலேசிய வாசுதேவன்
வரிகள் : பஞ்சு அருணாச்சலம்

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்
தென்மதுரை..........

நம்மைப் போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை எண்ணும்
நீயும் நானும் ஓர் தாய்ப் பிள்ளை
தம்பி உந்தன் உள்ளம்தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய்க் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை
கண்ணோடுதான் உன் வண்ணம்
நெஞ்சோடுதான் உன் எண்ணம்
முன்னேறு நீ மேன்மேலும்
என் ஆசைகள் கைகூடும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க
தென்மதுரை..........

நெஞ்சில் என்னை நாளும் வைத்து
கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும்
கண்ணில் காணும் காலம் இன்று
பூவைச் சூடி பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னைக் கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே நானே
உன்னோடுதான் என் ஜீவன்
ஒன்றாக்கினான் நம் தேவன்
நீதானம்மா என் தாரம்
மாறாதம்மா என்னாளும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க
தென்மதுரை..........


பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா-அழகி


படம்: அழகி
இசை: இளையராஜா
பாடியவர்: சாதனா சர்கம்

பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டுக் கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா
குங்குமமும் மங்கலமும் ஒட்டி வந்த ரெட்டை குழந்தையடி
சந்தனத்து சிந்து ஒன்று கட்டிக் கொண்டு மெட்டொன்று தந்ததடி
பாட்டு சொல்லி..

இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதனை யாரறிவார்
வாழ்க்கை செல்லும் பாதை தனை யாருரைப்பார்

இருள் தொடங்கிடும் மேற்கு அங்கு இன்னும் இருப்பது எதற்கு
ஒளி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஒளி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை
பாட்டு சொல்லி..

புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா
செவி உணர இசையை மனம் உணர்ந்ததம்மா
இடம் கொடுத்த தெய்வமதை அறிந்து கொண்டேன்
வாழ்த்தியதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்

அன்று சென்ற இளம் பருவம் அது என்ன என்ன மனம் நிறையும்
அன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைத்தது வரமே
அதை கைப்பிடித்தே தொடர்ந்து செல்வேன் கலக்கமில்லை
பாட்டு சொல்லி..


செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்-முள்ளும் மலரும்


படம்: முள்ளும் மலரும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யேசுதாஸ்
பாடலாசிரியர்: கண்ணதாசன்

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
செந்தாழம்பூவில்...

பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
செந்தாழம்பூவில்...

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
செந்தாழம்பூவில்...

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி
செந்தாழம்பூவில்...

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க-உயிரே உனக்காக


படம்: உயிரே உனக்காக
இசை: லஷ்மிகாந்த
பாடியவர்கள்: ஜானகி
பாடலாசிரியர்: வைரமுத்து

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
(பன்னீரில்)

வசந்தம் வரும் காலம்
விழியில் வண்ணக் கோலம்
கூ.கு....குக்குக்கூ.
கூ.கு....குக்குக்கூ.
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே..
(பன்னீரில்)

நானுமோர் தென்றல் தான்
ஊரெல்லாம் சோலை தான்
எங்குமே ஓடுவேன்
நதியிலே நீந்துவேன்
மலர்களை ஏந்துவேன்
எண்ணம் போல் வாழுவேன்

தந்தனத் தான தன
தந்தனத் தானனா

இளமைக் காலம் மிக இனிமையானது
உலகம் யாவும் மிகப் புதுமையானது
(பன்னீரில்)

மாளிகைச் சிறையிலே
வாழ்ந்த நாள் வரையிலே
சுதந்திரம் இல்லையே
விடுதலை கிடைத்தது
வாசலும் திறந்தது
பறந்ததே கிள்ளையே

தந்தனத் தான தன
தந்தனத் தானனா,

நிலவும் நீரும் இந்த அழகுச் சோலையும்
எளிமையான அந்த இறைவன் ஆலயம்
(பன்னீரில்)

தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ-தூறல் நின்னு போச்சு


படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி, மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர்: வைரமுத்து

தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோழில் துஞ்சியதோ...
தங்கச் சங்கிலி...

மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி
தங்கச் சங்கிலி...

காவல் நூறு மீறி
காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூ வேலைகள்
உன் மேனியில் பூஞ்சோலைகள்

அந்திப் பூ விரியும்
அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கணவு கனியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்
தங்கச் சங்கிலி...

ஆடும் பொம்மை மீது
ஜாடை சொன்ன மாது
லாலா லாலலாலா லால லால லாலா

கண்ணோடு தான் போராடினாள்
வேர்வைகளின் நீராடினாள்
ராராரரா ராராரரா ராராரரா ராராரரா

அன்பே ஆடை கொடு
எனை அனுதினம் அள்ளி சூடிவிடு

இதழில் இதழால் கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட மடி கொடு
தங்கச் சங்கிலி...
மலர்மாலை...
தங்கச் சங்கிலி...




Saturday, September 22, 2012

பூங்காற்றிலே உன் சுவாசத்தை-உயிரே


படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி மேனன், ஸ்வர்ணலதா
பாடலாசிரியர்: வைரமுத்து

ஓ.. கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..
(கண்ணில்..)

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடி வா..
(பூங்காற்றிலே..)

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிக்கின்றதா
நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகின்றதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடி வா..
(பூங்காற்றிலே..)

(கண்ணில்..)
(கண்ணில்..)
வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் முன்னே
ஓடோடி வா..
(பூங்காற்றிலே..)


Friday, September 21, 2012

சிவதாண்டவம்-தாண்டவம்


படம்:தாண்டவம்
இசை: G.V.பிரகாஷ்
பாடியவர்கள்:  S. P.பாலசுப்ரமணியம்
பாடல்:நா.முத்துகுமார்

தகிட தகிட தகதா..., தகிட தகிட தகதா...,
தகிட தகிட திமி, தகிட தகிட திமி,
தகிட தகிட திமி தாண்டவம்

சுடலை சாம்பல் அதை உடலில் பூசிக் கொண்டு
கைலை நாதன் வரும் தாண்டவம்
ஜனனம் தாண்டி வந்து, மரணம் வேண்டி வந்து
இறைவனாகி வரும் தாண்டவம்

இரவும் நடுங்கிவிட பகலும் ஒடுங்கிவிட
சுழன்று சுழன்று வரும் தாண்டவம்
இருவி இருகி ஒரு இரும்பை போல
மனம் திருகி தேடி வரும் தாண்டவம்

ஊழி காற்றடிக்க ஆழி கூத்தடிக்க
அகிலம் நடுங்கி விடம் தாண்டவம்
பாவம் செய்தவனை கோபம் கொன்று
ஒரு சாபம் தீர்க்க வரும் தாண்டவம்
தர்மம் காக்கும் நடனம்
இது நியாயம் வெல்லும் தருனம்
ரத்தம் பருகும் நடனம்
இதன் முற்று புள்ளி மரணம்

அற்புதத் தாண்டவம், மனவரன தாண்டவம்
ஆனந்தத் தாண்டவம், பிரளய தாண்டவம்
சம்ஹாரத் தாண்டவம்

நன்மை கப்பதற்கு தீமை கொள்வதற்கு
சிவனின் கோபம் இந்த தாண்டவம்
சிவ தாண்டவம், சிவ தாண்டவம்
சிவ தாண்டவம், சிவ தாண்டவம்
சிவ தாண்டவம், சிவ தாண்டவம்
சிவ தாண்டவம், சிவ தாண்டவம்

அனிச்சம் பூவழகி -படம்:தாண்டவம்


படம்:தாண்டவம்
இசை: G.V.பிரகாஷ்
பாடியவர்கள்: சின்னப்பொன்னு,வேல்முருகன்
பாடல்:நா.முத்துகுமார்

என் கண்ணே... தந்தானா...
தனனானா...

மையல் குய்யல் ஏஏ மையல் குய்யல்
மையல் குய்யல் ஓஓ மையல் குய்யல்
மையல் குய்யல் ஏஏ மையல் குய்யல்

அனிச்சம் பூவழகி
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி
கேரங்க வைக்கம் பேரழகி
எங்கேங்கோ எங்கேங்கோ
பறந்து நா போனேனே
சண்டாலி உன் கிட்ட
சருகாகி நின்னேனே

வாரான்டி வாரான்டி
வரிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகுட்டு
பரிசம் கொண்டு வாரான்டி
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு

நேத்து வரை வெண்ணிலவு
வீன் நிலவு என்று இப்போ
தோனுதடி அடியே தோனுதடி
ஆல வரும் வெண்நிலவு
தோன் நிலவு என்று இனி
மாறுமடி அடியே மாறுமடி
செல்லாத சந்தோஷம்
அல்லாம அல்லுதடி
பொல்லாத ஒரு வாரம்
கில்லாம கில்லுதடி
ஏ புள்ள வா மெல்ல
கனவுகள் எடுத்துச் செல்ல
(வாரான்டி வாரான்டி)

புது பெண்ணு மாப்பிள்ளைக்கு
பூவ அல்லி சூடுங்கடி
மாப்பிள்ளையும் பொண்ணும்
நல்லா வாழனும்னு வாழ்த்துங்கடி
(புதுபெண்ணு )

ஓ.... தந்தனா... தந்தனா...
தந்தனா... தந்தனா... னா...

சாத்தி வச்ச நெஞ்சில் இப்போ
சேத்து வச்ச காதல் வந்து
தாக்குதடி அடியே தாக்குதடி
போர் கலத்த தாண்டி இப்போ
பூக்கடைக்கு கால்கள் இனி
போகுமதடி அடியே போகுமதடி

மரியாதை இல்லாம
மனசென்ன திட்டுதடி
உன் பெயர செல்லச் செல்லி
உள் நாக்கு கத்துதடி
ஏ புள்ள வா மெல்ல
கனவுகள் எடுத்துச் செல்ல
(வாரான்டி வாரான்டி)

ஓ... அனிச்சம் பூவழகி
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி
கேரங்க வைக்கம் பேரழகி
எங்கேங்கோ எங்கேங்கோ
பறந்து நா போனேனே
சண்டாலி உன் கிட்ட
சருகாகி நின்னேனே

நீ என்பதே நான் தாண்டி-தாண்டவம்


படம்: தாண்டவம்
இசை: G.V.பிரகாஷ்
பாடியவர்கள்: ஹரிச்சரண்,வந்தனா
பாடல்: நா.முத்துகுமார்

நீ என்பதே நான் தாண்டி
நான் என்பதே நாம் தாண்டி... ஈ...

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்
(நீ என்பதே)

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி... ஈ...

இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சோர்த்து விடும்

ஓ... கதவுகளை திருடி விடும்
அதிசயத்தை காதில் செய்யும்

இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது
இடையில் பெய் பூட்டு போனது

வாசல் தல்லாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி... ஈ...

ஓ... இடி இடித்தும் மழை அடித்தும்
அசையாமல் நின்றிருந்தோம்

ஓ... இன்றேனே நம் மூச்சும்
மென் காற்றில் இணைந்து விட்டோம்

இதயம் ஒன்றாகி போனதே
கதவு இல்லாமல் ஆனதே

இனி மேல் நம் வீட்டிலே
பூங்காற்று தான் தினம் வீசுமே

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாத்திருந்தோம்
(நீ என்பதே)

Thursday, September 20, 2012

உன்னாலே அழகானேன் உன்னருகே பெண்ணானேன் -தாண்டவம்


படம்: தாண்டவம்
இசை:G.V.பிரகாஷ்
பாடியவர்கள்:Alyssa, Marie
பாடல்:நா:முத்துக்குமார்

Will You Be There
When I Need You
Will You Be There
When I Want You
Ohh Will You Be There
I Can Feel You
Ohh Will You Be There
I Love You

உன்னாலே அழகானேன் உன்னருகே பெண்ணானேன்
உன்சிரிபில் தூளானேன் இன்றேனோ வேரானேன்

இதுவலி எல்லாம் Know You Know You
இது தந்தவன் யார் நீயு நீயு
நான் ஆனதை நினைபதே தனி
நினைப்பதும் நடக்குமா இனி
உன் கைவிரலில் என் கைவிரல்கள்
ஒன்றாக திண்டும்போது சாரலாகி....

Will You Be There
When I Need You
Will You Be There
When I Want You
Ohh Will You Be There
I Can Feel You
Ohh Will You Be There
I Love You

என்னை தோற்றேனே ஏனோ ஏனோ
உன்னை வென்றேனே நானோ நானோ
எழபதும் காதலில் சுகம்
அலைகிறேன் உனிடம் தினம் Oh
என் யோசனையில் உன் வாசனையை
நீவந்து தூவி தூவி தாவிபோகிறாய்

Will You Be There
When I Need You
Will You Be There
When I Want You
Ohh Will You Be There
I Can Feel You
Ohh Will You Be There
I Love You

உன்னாலே அழகானேன் உன்னருகே பெண்ணானேன்
உன்சிரிபில் தூளானேன் இன்றேனோ வேரானேன்

யாரடி யாரடி மோகினி போல என்-தாண்டவம்


படம்: தாண்டவம்
இசை: G. V.பிரகாஷ்
பாடியவர்கள்: ராகுல் நம்பியார்
பாடல்: நா.முத்துக்குமார்
 
யாரடி யாரடி மோகினி போல என்
கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும் பூமியில் அவ்விடம்
பூக்கள் தந்து சென்றாய்
நிலா போலவே உலா போகிறாய்
நிழல் வீசியே புயல் செய்கிறாய்
கருங்கூந்தலில் வலை செய்கிறாய்
குறும் பார்வையில் கொலை செய்கிறாய்

கண்ணாடி இவள் பார்த்தால் கவிதை என்று சொல்லும்
வேராரும் பார்க்கும் முன்னே கண்ணை மூடி கொள்ளும்
ஒரு கோடி பூக்கள் கொய்து
அதில் தேனை ஊற்றி செய்தாய்
இவள் தேவதை, இதழ் மாதுளை
இவள் பார்வையில், சுடும் வானிலை
சுடர் தாரகை, முகம் தாமரை
இரு கண்களில், இவள் நேரலை

யாரடி யாரடி மோகினி போல என்
கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும் பூமியில் அவ்விடம்
பூக்கள் தந்து சென்றாய்

in front of me ..
tracked in me
my breathe is little weak

I am feeling so good
its such a cool mood
come on baby make make a tweet of something
give me more of this thing
Sweet something, give me more of this thing

உடை போடும் விதம் பார்த்து ஊரே ஆடி போகும்
இடை ஆடும் நடம் பார்த்து இதயம் நின்று போகும்
அலை ஆடும் நுரையை சேர்த்து,
அதில் பாலை ஊற்றி செய்தால் உன்னை
மயில் போல் இவள் விருந்தாடினால்,
துயில் யாவுமே, தொலைந்தாடுமே
நடை பாதையில், இவள் போகையில்
மரம் யாவுமே, குடை ஆகுமே

யாரடி யாரடி மோகினி போல என்
கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும் பூமியில் அவ்விடம்
பூக்கள் தந்து சென்றாய்
நிலா போலவே உலா போகிறாய்
நிழல் வீசியே புயல் செய்கிறாய்
கருங்கூந்தலில் வலை செய்கிறாய்
குறும் பார்வையில் கொலை செய்கிறாய்

உயிரின் உயிரே உனது விழியில்-தாண்டவம்


படம்: தாண்டவம்
இசை: G. V. பிரகாஷ்
பாடியவர்கள்: சைந்தவி,சத்யபிரகாஷ்
பாடல்: நா.முத்துகுமார்

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலை நானாகிறேன்
காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

சாயங்காலம் சாயும் நேரத்தில்
தோழி போல மாறுவேன்
சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில்
தாயை போல தாங்குவேன்
வேறு பூமி வேறு வானம்
தேடியே நாம் போகலாம்
சேர்த்து வைத்த ஆசையாவும்
சேர்ந்து நாமங்கு பேசலாம்

அகலமலே அனுகமலே இந்த
நேசத்தை யார் நெய்தது
அறியாமலே புரியாமலே
இரு நெஞ்சுக்குள் மழை தூவுது

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

தண்டவாளம் தள்ளி இருந்தது
தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது
என்னுள் உன்னை தேடத்தான்
ஐந்து வயது பிள்ளை போலே
உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்
செல்ல முத்தம் பாதிக்கவா
நிகழ் காலமும் எதிர் காலமும்
இந்த அன்பெனும் வரம் போதுமே
இறந்தலுமே இரகமலே இந்த
ஞாபகம் என்றும் வாழுமே

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலை நானாகிறேன்
காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்

போ நீ போ போ நீ போ-3


படம் : 3
பாடியவர் : அனிருத், மோகித் சவுகான்
இசை : அனிருத்
வரிகள் : தனுஷ்

போ நீ போ போ நீ போ
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனதாகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ

தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ

உன்னாலே உயிர் வாழ்கிறேன் உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினால் வாழ்வேனே பெண்ணே

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருளில் தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா

போ நீ போ போ நீ போ
என் காதல் புரியலயா உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனதாகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ

தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ

ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி-அட்டகத்தி


படம் : அட்டகத்தி
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள் : பிரதீப், கல்யாணி நாயர்
வரிகள் : கபிலன்

ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி
பூ மீது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே
ஓ ரிங்காரமே இரு நெஞ்சில் மௌனமாக கேட்குமே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்

யார் உயிர் யாரோடு
யார் உடல் யாரோடு போனது
மர்மம் ஆனது இன்பம்
காற்றுக்கு எல்லை இல்லையே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்

இளமை தூக்கதில் இரண்டு ஏக்கங்கள்
விழித்து பார்த்ததும் வண்ணங்கள்
விரல்கள் கோர்த்து தான் திசைகள் மீறலாம்
காற்றுக்கு எல்லை இல்லையே

மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே
மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே

Monday, September 17, 2012

அய்யய்யய்யோ ஆனந்தமே (பெண்)-கும்கி


படம் : கும்கி
இசை : D. இமான்
பாடியவர் : அதிதி பால்
வரிகள் : யுகபாரதி

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச வா வா கதை பேச
அய்யய்யய்யோ

சொல்ல நினைப்பதை சொல்லி முடித்திட
இல்லை இல்லை துணிச்சல்
நெஞ்சில் இருப்பதை கண்கள் உரைப்பது
ரொம்ப ரொம்ப குறைச்சல்

ஒரு கேணி போல ஆச ஊறுதே
மருதாணி போல தேகம் மாறுதே
பக்கத்தில் வந்தது பாசம்
இனி வெட்கங்கள் என்பது வேஷம்
உயிரே உறவே உனதே

ஏலோ ஏலோ ஏலோ
ஏலோ ஏலாலங்கடி ஏலோ ஏலோ
ஏலோ ஏலோ ஏலோ
ஏலோ ஏலாலங்கடி ஏலோ ஏலோ

ஜென்மம் முழுவதும் உந்தன் விழிகளில்
தங்கி கொள்ள வரவா
உன்னை விட ஒரு நல்ல மனிதனை
கண்டதில்லை தலைவா
கடிவாளம் ஏது காதல் ஓடவே
கிடையாது தோல்வி நாமும் சேரவே
முன்னுக்கு வந்தது மோகம்
சில முத்தங்கள் தந்திடு போதும்
உடனே வருவேன் சுகமே

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே