Monday, October 1, 2012

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்-3


படம்: 3
இசை: அருனித்
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், ஸ்வேதா மேனன்
பாடலாசிரியர்: தனுஷ்

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
ம்... ம்... கேட்டாலும் வருமா கேட்காத வரமா

இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
ம்... ம்... கேட்டாலும் வருமா கேக்காத வரமா

நிழல் தரும்… இவள் பார்வை…
வழி எங்கும்… இனி தேவை…
உயிரே… உயிரே… உயிர் நீ தான் என்றால்…
உடனே… வருவாய்… உடல் சாகும் முன்னால்…

அனலின்றி… குளிர் வீசும்…
இது எந்தன்… சிறை வாசம்

இதில் நீ மட்டும் வேண்டும்… பெண்ணே…
நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
ம்... ம்... கேட்டாலும் வருமா கேட்காத வரமா

இது போதுமா… இதில் அவசரமா…
இன்னும் வேண்டுமா… அதில் நிறைந்திடுமா…
நாம் பார்த்த நாள்… நம் வசம் வருமா…
உயிர் தாங்குமா....

No comments:

Post a Comment