Thursday, October 25, 2012

உல்லாச உலகம் உனக்கே சொந்தம்-அலிபாபாவும் நாற்பது திருடர்களும்


படம்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
இசை: தட்சிணாமூர்த்தி
பாடியவர்: கண்டசாலா
பாடல்: மருதகாசி

உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ..ஓ..ஓ..ஓ..ஓ…
செய்யடா செய்யடா செய்யடா

கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து……
கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து
கூறையை பிரிச்சி கொட்டுமடா
கிடைச்சதை நீயும் வாரிவச்சா
கிட்டாத சுகமே இல்லையடா
கெட்டாகவே … கெட்டாக எதையும் சேர்த்து வைக்காதே
தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

மீச நறச்சி போன பின்னாலே …
மீச நறச்சி போன பின்னலே
ஆசை நறச்சி போய்விடுமா
வயசு அதிகம் ஆன பின்னாலே
மனசும் கிழமாய் மாறிடுமா
காத்திருந்தா .,,… காத்திருந்தா அதை அனுபவச்சிடணும்
தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
பைசாவை கண்டா நைசாக பேச
பைசாவை கண்டா நைசாக பேச
பல ரக பெண்கள் வருவாங்க
பக்கத்தில் வந்து.. பக்கத்தில் வந்து
ஹுக்காவை தந்து பாடி ஆடி சுகம் தருவாங்க
பட்டான மேனி..பட்டான மேனி பட்டாலே இன்பம்
மெய்யடா மெய்யடா மெய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ..ஓ..ஓ..ஓ..ஓ…
செய்யடா செய்யடா செய்யடா

உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

No comments:

Post a Comment