Friday, October 26, 2012

நாகமலை சாய்ஞ்சுடுச்சே நட்டச்செடி காய்ஞ்சுடுச்சே-அரவான்


படம் : அரவான்
இசை : கார்த்திக்
பாடியவர் : கோபால், சீர்காழி G. சிவசிதம்பரம், சுபிக்ஷா
வரிகள்: நா. முத்துக்குமார்

நாகமலை சாய்ஞ்சுடுச்சே நட்டச்செடி காய்ஞ்சுடுச்சே
வாழும் விதி பாய்ஞ்சுடுச்சே
ஒத்த கல்லு சொன்ன சொல்லு
உன் உசுரை வாங்கிடுச்சே
விதியே உன் விதியே

என் சூரியன் சூரியன் சட்டுனு சட்டுனு இருட்டாய் போனது ஏனோ
என் சந்திரன் சந்திரன் பட்டுனு பட்டுனு உடைஞ்சே போனது ஏனோ
விதி கண்ணீரு சிந்தாம அணையாத ஜோதி
இந்த கதைய எழுதிய விதியை பார்த்து கேட்டானொரு கேள்வி
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்

ஏய் வானம் கேட்கல பூமி கேட்கல வெயிலும் கேட்கல மழையும் கேட்கல
காத்தும் கேட்கல கடவுள் கேட்கல மனுஷன் கேட்குறானே
மனுஷன் கேட்குறானே

அந்த பறவை கேட்கல மிருகம் கேட்கல
பாம்பு கேட்கல பல்லி கேட்கல
நாயும் கேட்கல பேயும் கேட்கல மனுஷன் கேட்குறானே

அவன் நாக வம்ச புள்ள  இங்க யாரும் ஈடு இல்லை
தன் தலையைப் பார்த்துத் தானே அவன் திருப்புறானே வில்லை

அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்டா

இந்த மரணப்பாதையின் தூரம் ரொம்ப தூரமோ
வரும் மரணம் பார்த்து வரும் வலிகள் ரொம்ப பாரமோ

இந்த உயிரும் பறந்து ஒரு புகையை போல போகுமோ
இந்த உயிரும் போன பின்பு மூளும் பகையும் போகுமோ
அன்பில்லாத உலகம் பண்பில்லாத நரகம்
இந்த தேகம் தாகம் எல்லாம் இனிமேல் தீயில் வேகும் விறகு
அந்த நோகும் கேட்கல தீயும் கேட்கல
மாடன் கேட்கல காடன் கேட்கல
ஈசன் கேட்கல எமனும் கேட்கல
மனுஷன் கேட்குறானே
உசுர கேட்குறானே என் உசுர கேட்குறானே

அவன் மரணம் சொல்லும் கதை மண்ணில் வீழ்ந்த விதை
என்றும் வாழ்பவனை என்ன செய்யும் சிதை
வெயிலாய் நிலவாய் காற்றாய் வாழ்வானே
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்

அவன் தான்

அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்

அரவான் அரவான் அரவான் அரவான்
அரவான்  அரவான்  அரவான்

நந்தகுமாரா
நவநீத கண்ணா மாயன் முகுந்தா

நந்தகுமாரனை பார்த்தேனோ எங்கள் நந்தகுமாரனை பார்த்தேனோ
நந்தகுமாரனை பார்த்தேனோ எங்கள் நந்தகுமாரனை பார்த்தேனோ
கார்மேக வண்ணன் கருநீல கண்ணன்
கார்மேக வண்ணன் கருநீல கண்ணன்
எங்கள் பெருங்காதல் தீர்க்கின்ற மன்னன் மன்னன் மன்னன்
நந்தகுமாரனை பார்த்தேனோ பார்த்தேனோ பார்த்தேனோ
பார்த்தேனோ

குளிர் கூதல் வரும் போது அனல்தானவன்
தளிர் கைகள் தொடும் போது தனப்பானவன்
இருகொங்கை அனல் மேட்டில் புனல்தானவன்
இருகொங்கை அனல் மேட்டில் புனல்தானவன்
மிருதங்கம் இடை சேரும் குரல்தானவன்

நந்தகுமாரனை பார்த்தேனோ எங்கள் நந்தகுமாரனை பார்த்தேனோ
கார்மேக வண்ணன் கருநீல கண்ணன்
கார்மேக வண்ணன் கருநீல கண்ணன்
எங்கள் பெருங்காதல் தீர்க்கின்ற மன்னன் மன்னன் மன்னன்
நந்தகுமாரனை பார்த்தேனோ பார்த்தேனோ பார்த்தேனோ
பார்த்தேனோ

No comments:

Post a Comment