Thursday, September 20, 2012

உயிரின் உயிரே உனது விழியில்-தாண்டவம்


படம்: தாண்டவம்
இசை: G. V. பிரகாஷ்
பாடியவர்கள்: சைந்தவி,சத்யபிரகாஷ்
பாடல்: நா.முத்துகுமார்

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலை நானாகிறேன்
காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

சாயங்காலம் சாயும் நேரத்தில்
தோழி போல மாறுவேன்
சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில்
தாயை போல தாங்குவேன்
வேறு பூமி வேறு வானம்
தேடியே நாம் போகலாம்
சேர்த்து வைத்த ஆசையாவும்
சேர்ந்து நாமங்கு பேசலாம்

அகலமலே அனுகமலே இந்த
நேசத்தை யார் நெய்தது
அறியாமலே புரியாமலே
இரு நெஞ்சுக்குள் மழை தூவுது

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

தண்டவாளம் தள்ளி இருந்தது
தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது
என்னுள் உன்னை தேடத்தான்
ஐந்து வயது பிள்ளை போலே
உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்
செல்ல முத்தம் பாதிக்கவா
நிகழ் காலமும் எதிர் காலமும்
இந்த அன்பெனும் வரம் போதுமே
இறந்தலுமே இரகமலே இந்த
ஞாபகம் என்றும் வாழுமே

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலை நானாகிறேன்
காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்

No comments:

Post a Comment