Thursday, September 27, 2012

மாயாவி மாயாவி-முகமூடி


படம்: முகமூடி
இசை: கிருஸ்ணகுமார்
பாடியவர்கள்: சின்மயி
வரிகள்: மதன் கார்க்கி

மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தேதான் திரிவான்
தலை தொடும் அலையென எழுந்திடுவான் - நெஞ்சில்
அணைத்திடும் மழையென நனைத்திடுவான்!

பயம் மூளும் நேரம் தரை வந்து காப்பான்
துயர் கொண்ட பேரை கரை கொண்டு சேர்ப்பான்
கடமை முடிந்தால் பறந்திடுவான் - பாவி
இவளின் துயரம் மறந்திடுவான்
அவனோடிவள் இதயம் தொலையும்! - தனிமைத் தெருவில்
இவளோடவன் நிழலும் அலையும்!

எழுநூறு கோடி முகம் இங்கு உண்டு
அழகான ஒன்றை எவர் கண்டதுண்டு?
மனதோர் உருவம் வரைகிறதே - காற்றில்
கனவாய் அதுவும் கரைகிறதே
கொடுமை அதில் கொடுமை எதுவோ? - விழிகள் இருந்தும்
உனை காணவே முடியாததுவோ?

No comments:

Post a Comment