Thursday, September 13, 2012

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது -காவலன்


படம்: காவலன்
பாடியவர்கள்: கே,கே, ரீட்டா
இசை: வித்யாசாகர்
பாடல்: கபிலன்

ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
    பூவே ஓடாதே

பெ : காதல்தேனை சாப்பிடும் போது
     பேசக் கூடாதே

ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
    பூவே ஓடாதே

பெ : காதல்தேனை சாப்பிடும் போது
     பேசக் கூடாதே

ஆ : யானைத் தந்தத்தின் சிலை நீயே
    ஏறும் தங்கத்தின் விலை நீயே

பெ : காதல் வீசிய வலை நீயே
     என்னைக் கட்டி இழுத்தாயே

ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
    பூவே ஓடாதே

பெ : காதல்தேனை சாப்பிடும் போது
     பேசக் கூடாதே

பெ : எதைத்த தருவது தானென்று
     எதைப் பெறுவது தானென்று
     குறுக்கும் நெடுக்கும் குழந்தை போல
     இதயம் குதித்தோட

ஆ : தலையசைக்குது உன் கண்கள்
    தவிதவிக்குது என்நெஞ்சம்
    ஒரு தீ போல ஒருத்தி வந்து
    உயிரைப் பந்தாட

பெ : ஞாபகம் உன் ஞாபகம்
     அது முடியாத முதலாகும்

ஆ : பூமுகம் உன் பூமுகம்
    அது முடியாத முதல் பாகம்

பெ : பெண்கவிதை இவள்தானே
     உன் இதழால் படிப்பாயோ
     கண்ணிமையால் எனை மூடி
     காதல் திறப்பாயோ

ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
     பூவே ஓடாதே

பெ : ஓய் ஓய் காதல்தேனை சாப்பிடும் போது
     பேசக் கூடாதே

ஆ : அலைவரிசையில் நீ சிரிக்க
     தொலைத்தொடர்பினில் நான் இருக்க
     உதடும் உதடும் பேசும் போது
     உலகை மறந்தேனே

பெ : உனதருகினில் நானிருக்க
     உயிர்க் கொழுந்தினில் பூ முளைக்க
     இரண்டாம் முறையாய் இதயம் துடிக்கப்
     புதிதாய்ப் பிறந்தேனே




ஆ : மாலையில் பொன் மாலையில்
    உன் மடி மீது விழுவேனே

பெ : மார்பினில் உன் மார்பினில்
     நான் மருதாணி மழை தானே

ஆ : வெண்ணிலவோ நெடுந்தூரம்
    பெண்ணிலவோ தொடுந்தூரம்
    உன்மழையில் நனைந்தாலே
    காய்ச்சல் பறந்தோடும்

ஆ : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
    பூவே ஓடாதே

பெ : காதல்தேனை சாப்பிடும் போது
     பேசக் கூடாதே

ஆ : யானைத் தந்தத்தின் சிலை நீயே
    ஏறும் தங்கத்தின் விலை நீயே

பெ : காதல் வீசிய வலை நீயே
     என்னைக் கட்டி இழுத்தாயே


No comments:

Post a Comment