Sunday, December 23, 2012

பொய்க்கால் குதிரை வாழ்க்கையடா-சமர்


படம்: சமர்
இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியோர்: யுவன்சங்கர்ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்


பொய்க்கால் குதிரை வாழ்க்கையடா
போகும் வழியோ தூரமடா
இருளும் ஒளியும் இடையினிலே
சடுகுடு நடத்திடும் நேரமடா

காலையில் கண் விழித்தால்
இன்று என்ன வரும் யாருக்கும் தெரிவதில்லை
சாலையில் கண் மோதினால்
நாம் மறுபடி நடந்திட மறுப்பதில்லை

கொடுத்த இடங்களை நிரப்ப
வாழ்க்கை ஒன்றும் கேள்வியில்லை
இருட்டினில் நதிகள் நகர்ந்தாலும்
சத்தம் அதை சொல்லிவிடும்

சுடலையிலே எரியும் வேலை
சூத்திரம் இதை தான் கற்றுப்பார்
உன் உடலை விட்டு வெளியேரி
உன்னை நீயே உற்றுப்பார்

இந்த க்லைடாஸ்கோப்பில் கண்ணாடி துண்டுகளை
உருத்துவது யார் மிரட்டுவது யார்
துரத்துவது யார் புரட்டுவது யார்
யார் யார் யார் யார்

இவன் பார்த்த காட்சிகள் பிழைதானா
இல்லை தெடர்ந்து துரத்திடும் மழைதானா
(இவன் பார்த்த)

மூச்சு வாங்குதே மூச்சு வாங்குதே
விட்டு விட்டு விட்டு மூச்சு வாங்குதே
காட்சி மாறுதே காட்சி மாறுதே
கண்ணை கட்டி விட்டு சாட்சி மாறுதே

இவன் மாய தீயிலே வீழ்ந்தானா
இனி காயம் இன்றியே எழுவானா
(மூச்சு வாங்குதே)

இவன் பாதை எங்கிளும் வலிதானா
இது தேடி வந்ததில் விலை தானா
(மூச்சு வாங்கியே)

No comments:

Post a Comment